இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வர்த்தக சந்தையை கொண்டு இருக்கும் சியோமி கடந்த சில வருடங்களாக அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சியோமி இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும், லாபகரமானதாக மாற்றுவதற்கும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் சியோமி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய நிலையில், தற்போது ஊழியர்கள் எண்ணிக்கை 1000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 பேரை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மேலும் இனி வரும் காலத்திலும் அதிகப்படியானோர்-க்கு பிங்க் ஸ்லிப் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொடிக்கட்டி பறந்து வந்த சியோமி கடந்த 2 வருடத்தில் வர்த்தக இழப்பு, மத்திய அரசு அமைப்புகளிடம் இருந்த வந்த கட்டுப்பாடுகள் என அனைத்தும் சேர்ந்து நிர்வாக மறுசீரமைப்பின் கீழ் 6 மாதத்தில் 500க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
சியோமி இந்தியா நிறுவனத்தில் அதன் நிர்வாக முடிவுகள் அனைத்தையும் சீன நிர்வாகம் தான் எடுக்கிறது. இந்தியாவில் இருக்கும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சீன தாய் நிறுவனத்தின் உத்தரவுகளை பின்பற்றுகிறது. இதன் மூலம் சியோமி இந்தியாவில் இந்திய ஊழியர்களுக்கான அதிகாரம் மிகவும் குறைவு என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்ய முடிகிறது.
இதுகுறித்து சியோமி நிர்வாகம் கூறுகையில், இந்தியாவில் பணிநீக்கம் வர்த்தக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வர்த்தக கணிப்புகள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி மிகவும் வலிமையாக இருந்து 10000 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன் பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது. இப்பிரிவில் மட்டும் சியோமி சுமார் 44 சதவீத வர்த்தகத்தை கொண்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சியோமியின் மொத்த மொபைல் விநியோகம் 50 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதேவேளையில் 70 - 80 மில்லியனாக இருந்தது. இதேபோல் சியோமி தனது முதல் இடத்தை சாம்சாங் நிறுவனத்திடம் இழந்துள்ளது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications