2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டினை பொறுத்தவரையில் பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்து 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதற்கு விதை போட்ட ஆண்டாக மாறியிருக்கிறது.2024 ஆம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு தொடங்க இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடுகள் குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தில் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஸ்டாலின் அரசு தன்னுடைய உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது.

இந்த மாநாட்டில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் கலந்துகொண்டு பெருமளவிலான முதலீடுகளை மேற்கொண்டன. இந்த மாநாட்டின் போது தான் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் சென்னையின் புகழ்பெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் அறிவிப்பினை வெளியிட்டது.
ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாடு 6.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தது. இதன் மூலம் மாநிலத்தில் 26 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதில் குறிப்பாக வியட்நாமை சேர்ந்த வின் ஃபாஸ்ட் என்ற நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 16,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்களுடைய ஆலையை நிறுவ இருப்பதாக அறிவித்தது. இதன் மூலம் அந்த பகுதியில் புதிதாக 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகன உற்பத்தி ஆலையை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 5000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு முதலீடுகளை ஈர்த்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவன தலைவர்களை அவர் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வழங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனை அடுத்து அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் வாயிலாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 7618 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
இந்த முதலீடுகள் வாயிலாக 12,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இது தவிர மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல அறிவிப்புகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன் விளைவாக இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் நான்கு சக்கர மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
அதேபோல தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டாம் நிலை நகரங்களில் சிப்காட்டுகள் மற்றும் மினி டைடல் பூங்காக்களை அமைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications