ஒரே மரத்தில் பூக்கள் காய்கள் மற்றும் கனிகள்.. பீகாரில் அதிசயம் நிகழ்த்தும் விவசாயி!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே ஃபேன் பேஸ் குறையாது. மாம்பழங்கள் பொதுவாக பலராலும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும். இதனால் நம்மில் பெரும்பாலானோர் ஒரு ஆண்டு முழுவதும் இந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் இது ஒரு பருவ கால பழமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மா மரங்கள் விளைச்சலைத் தரும். கோடை மாதங்கள் தான் மாம்பழ சீசன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி ஆண்டு முழுவதும் மாம்பழங்களை விளைவித்து சாதித்து காட்டியுள்ளார். அதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பீகாரில் உள்ள தர்பங்கா நகரத்தைச் சேர்ந்த விவசாயியான அகிலேஷ் சவுத்ரி, தனது பழத் தோட்டத்தில் பலவிதமான மாமரங்களை வைத்துள்ளார். அவை ஆண்டு முழுவதும் காய்க்குமாம். இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள் ஒருபுறமும், மாங்காய்கள் ஒரு புறமும், பழுத்த மாம்பழங்கள் ஒருபுறமும் இருக்குமாம். இதுபோன்ற டஜன் கணக்கான மரங்கள் அவருடைய தோட்டத்தில் உள்ளன. வருடம் முழுவதும் அவை விளைச்சளைத் தருகின்றன.

 ஒரே மரத்தில் பூக்கள் காய்கள் மற்றும் கனிகள்.. பீகாரில் அதிசயம் நிகழ்த்தும் விவசாயி!


இது போன்ற மாமரங்களை நாம் பார்த்திருக்க வாய்ப்பே கிடையாது. பொதுவாக நாம் பார்க்கும் மரங்கள் ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது கோடை காலத்தில் மட்டுமே பழங்களைத் தரும். ஆனால் இந்த தோட்டத்தில் விளையும் மாம்பழங்கள் அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கிறது.

மேலும் அகிலேஷ் சவுத்ரி தனது தோட்டத்தில் ஆண்டு முழுவதும் பழங்களைத் தரும் மரங்களை வளர்த்து வருகிறார். இதற்காக அவர் கடினமாக உழைக்கிறார். இதனால் அப்பகுதியில் சில மாதங்களை தவிர ஆண்டின் ஒவ்வொரு சீசனிலும் மாம்பழங்கள் கிடைக்கிறது. அந்த மாதங்களில் மாம்பழங்கள் பழுத்த உடன் மரங்கள் உடனடியாக பூக்கத் தொடங்கிவிடுகிறது.

அகிலேஷ் தோட்டத்தில் கிடைக்கும் மாம்பழங்கள் மற்றும் மாங்காய் வகைகள் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வகை மாம்பழங்கள் மிகவும் சுவை கொண்டதாக உள்ளதால், மக்கள் அவற்றை அதிகம் விரும்புகின்றனர்.

இந்த மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள், மாங்காய்கள் மற்றும் பழுத்த மாம்பழங்களை நம்மால் காண முடியும். இந்த மரங்கள் முஜாஹ்பூர் மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை என்றும், ஒவ்வொரு மாங்காய் எடையும் 500 கிராம் முதல் இருக்கும் என்றும் அகிலேஷ் கூறியுள்ளார்.

நம் நாட்டில் உள்ள விவசாயிகள் இங்கு விளையவே விளையாது என்று கூறப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தொடர்ந்து விளைவித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு விவசாயி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாம்பழங்களை உடுப்பியில் பயிரிட்டு சாதித்துக் காட்டினார். இதிலிருந்து நாம் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். முடியாது என்ற ஒன்று இல்லை. சற்று முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+