முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் கட்டுப்பாட்டில் இயங்கும் உலகளாவிய ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனமான Addverb உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா-வில் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ள பாட்-வெர்ஸ் எனப்படும் ரோபோ உற்பத்தித் தொழிற்சாலையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்து திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் யோகி ஆதித்யநாத் பேசுகையில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த மாநில முதலீட்டாளர் நிகழ்ச்சியின் வாயிலாக சுமார் 36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இது மட்டும் அல்லாமல் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் முதலீட்டு விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதிகப்படியான விண்ணப்பங்கள் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் குவிந்துள்ளது, யோகி ஆதித்யநாத் முதல் முறையாக இந்த தகவலை பொதுவெளியில் கூறியுள்ளார்.
மேலும் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் உருவாக்கியுள்ள சிறப்பான சட்டம் ஒழுங்கு நிலைமை, மேம்பட்டு உள்ள உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், பாதுகாப்பு சூழல் போன்றவற்றின் விளைவாக முதலீடு வருகிறது. உள்நாட்டு நீர்வழிப் பாதைகளைக் கொண்ட முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம் என்றும் முதல்வர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 2017 க்கு முன்பு இரண்டு விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன, தற்போது 9 முழுமையாக செயல்படும் விமான நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் சாலை, நீர்வழி மற்றும் விமான வழி போக்குவரத்தையும் மேம்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.
இதேபோல் இந்த வருடத்தின் இறுதிக்குள் உத்தர பிரதேச மாநிலத்தில் 12 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம், இதில் முக்கியமாக 5 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலமாக உத்தர பிரதேசம் உயர உள்ளதாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications