இந்தியாவில் கார் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரம்பமான பொருள் என்பதைத் தாண்டி அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது, இதனால் தற்போது சிறிய கார் முதல் ஆடம்பர கார் வரையில் விற்பனையில் கலக்கி வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை பலரை கார் வாங்குவதில் இருந்து தடுத்து வருகிறது.
இதற்கு மாற்றாக எலக்ட்ரிக் கார் வந்தாலும் இதன் விலை அதிகமாக இருப்பதாலும், ரேஞ்ச் அச்சம் காரணமாகவும் மக்கள் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கும் தீர்வாகவே தற்போது ஹைப்ரிட் கார்கள் சந்தையில் அசத்தி வருகிறது, விலை, மைலேஜ், சுற்றுசூழல் பாதிப்பு என அனைத்திலும் சிறந்த வாகனமாக உள்ளது ஹைப்ரிட் கார்கள்.

இத்தகைய கார்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் அரசு ஹைப்ரிட் கார்களுக்கான ரிஜிஸ்ட்ரேஷன் டாக்ஸ்-ஐ முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. எலக்டரிக் கார்களுக்கு ஏற்கனவே பதிவு கட்டணம் செய்யப்பட்டு இருக்கும் வேளையில் தற்போது ஹைப்ரிட் கார்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது ஆச்சரியமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களுக்கான மோட்டார் வாகன வரியை முழுமையாக ரத்து செய்துள்ள வேளையில் ஹைப்ரிட் கார்களுக்கான வரியை குறைக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த மோட்டார் வாகன வரி என்பது மாநில அரசின் நேரடி வரி வருவாயாக இருக்கும் வேளையில், இதில் வரியை குறைத்தால் கட்டாயம் அரசின் வருவாயில் பாதிப்பு ஏற்படும், மறைமுகமாக பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பாதிக்கும். ஆனால் ஹைப்ரிட் கார்களை பயன்படுத்துவது மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்க முடியும் என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரியைக் குறைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த வரி குறைத்தால் ஹைப்ரிட் கார்களின் விலை 3.5 லட்சம் ரூபாய் வரையில் குறைய வாய்ப்பு உள்ளது. இது புதிதாக கார் வாங்குவோருக்கு பெரும் பலனை அளிக்கும்.
தற்போது சந்தையில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்கள் பக்கம் ஓடிக்கொண்டு இருக்கும் காரணத்தால் வெறும் 5 கார்கள் மட்டுமே 50 லட்சத்திற்குக் கீழ் உள்ளது. இந்த 50 லட்சம் ரூபாய் கீழ் இருக்கும் கார்கள் தான் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 95 சதவீத பங்கீடாகும்.
இந்த பிரிவின் கீழ் மாருதி நிறுவனம் தற்போது கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விடோ ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்கிறது, டொயோட்டா நிறுவனம் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹை கிராஸ் கார்களை விற்பனை செய்கிறது. மேலும், ஹோண்டா நிறுவனம் சிட்டி ஹைப்ரிட் காரைக் விற்பனை செய்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications