கிரெடிட் கார்டு, டெபிடிட் கார்டு' விபரங்கள் என, 4.6 லட்சம் இந்தியர்களின் விபரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த குரூப் ஐ.பி என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொருளாதார குற்றங்களைப் புரியும் ஜோகர் என்ற இணையதளத்தில்,சமீபத்தில், 4.6 லட்சம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது
கார்டு விவரங்கள் விற்பனை
இந்த 4.6 லட்சம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விபரங்களில் 98 சதவிகிதம், இந்தியாவைச் சேர்ந்த பிரபல வங்கிகள் வழங்கியவை என்று கூறப்படுகிறது. அதாவது மொத்தம் 4.5 லட்சம் கார்டுகள், இந்தியாவில் வழங்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. ஒரு கார்டு விபரம் 643 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மொத்த மதிப்பு இது தான்
இந்த கார்டுகளின் மொத்த மதிப்பு 4.2 மில்லியன் டாலர் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த 4.5 லட்சம் பேரின் விபரங்கள் மூலம், அவர்களுடைய கார்டுகளில் உள்ள பணத்தை திருடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சிங்கப்பூர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
என்ன விவரங்கள் விற்பனை?
இந்தியர்களின் கார்டுகள் விபரம் திருடப்பட்டுள்ளது குறித்து, கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், இந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் எச்சரித்துள்ளது. விற்கப்பட்ட தரவுகளில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளின் எண், அதன் காலாவதி தேதி, சிவிவி, சிவிசி எண்கள், கார்டு உரிமையாளர்களின் பெயர்கள், ஈமெயில், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தகவல்கள் திருட்டு
பெரும்பாலான கார்டுகள் விவரங்கள், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பாயின்ட் ஆப் சேல் கருவியில் பொருத்தப்பட்ட ஸ்கிம்மர் கருவிகள் மூலம் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் ஸ்டாஷ் இணையதளத்தில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை பெறும் கிரிமினல்கள் போலி அட்டைகளை தயாரித்து பணத்தை திருடுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications