மும்பை: இந்தியாவில் பைனான்சியல் இன்ஃப்ளுயன்சர்கள் (financial influencers) பங்குச்சந்தை சார்ந்த தகவல்களை பகிர்வதற்கு செபி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில் சரண் ஹெக்டேவின் (Sharan Hegde) 1% கிளப் நிறுவனத்திற்கு பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர் எனப்படும் ஆர் ஐ ஏ(registered Investment Advisor (RIA)) உரிமத்தை வழங்கியுள்ளது.
ஆர் ஐ ஏ உரிமம் பெறக்கூடிய நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு நிதி சார்ந்த அறிவுரைகளை சட்டப்பூர்வமாக வழங்க முடியும் .இந்தியாவில் முதன்முறையாக பைனான்சியல் இன்ஃப்ளுயன்சரால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் செபியின் உரிமம் பெற்ற முதலீட்டு ஆலோசனை நிறுவனமாக மாறி இருக்கிறது.

இதற்காக கிட்டத்தட்ட 6 முதல் 8 மாதங்களாக போராடினோம் என சரண் ஹெக்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் நிதி சார்ந்த மோசடிகள் குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம் பங்கு முதலீடு குறித்து போலியான வாக்குறுதிகளை அளித்து கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டு வருகிறது. எனவே கடந்த ஓராண்டு காலமாகவே செபி இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய நிதி சார்ந்த இன்ப்ளூயன்சர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இவ்வாறு பைனான்சியல் இன்ப்ளுயன்சர்களாக இருக்கக்கூடிய நபர்கள் செபியிடம் பதிவு செய்ய வேண்டும் என கூறுகிறது. அதேபோல பங்குச்சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது லைவ் டேட்டாவை வைத்து எந்த ஒரு தகவலையும் பகிரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சில தினங்களுக்கு முன்பு கூட செபி வெளியீடு செய்தது. இந்த நிலையில் 1% கிளப் நிறுவனம் ஆர் ஐ ஏ உரிமம் பெற்று இருக்கிறது.
தற்போது தங்களுடைய நிறுவனம் 45 பேரை கொண்டு செயல்படுவதாகவும் சுமார் 1000 பேருக்கு நிதி சார்ந்த அறிவுரைகளை வழங்கி வருவதாகவும் சரண் ஹெக்டே தெரிவித்துள்ளார். தங்களுடைய நிறுவனம் 1000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை மேலாண்மை செய்து வருவதாகவும், கடந்த ஓராண்டு காலத்தில் இதனை நாங்கள் சாத்தியப்படுத்தி இருக்கிறோம் அதுமட்டுமின்றி இதனை நாங்கள் லாபகரமாக நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
தங்களுடைய நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆக இருக்கிறது அதனை 2000 ஆக உயர்த்த வேண்டும் எனவும் ஒவ்வொருவரும் 200 முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு நிதி சார்ந்த அறிவுரைகளை வழங்கும் வகையில் உயர்த்த வேண்டும் என்பதுமே தங்களுடைய எண்ணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது முறையான நிதி ஆலோசகர்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாக கூறும் அவர் தற்போது இந்தியாவில் 2 முதல் 3 கோடி ரூபாய் வரை சேமிப்பு வைத்திருப்பவர்கள் மட்டுமே நிதி ஆலோசகர்களை கொண்டு இருக்கின்றனர் என்கிறார்.
செபி வெளியிட்டுள்ள தரவுகளின் படி பார்க்கும்போது இந்தியாவில் 10 லட்சம் நிதி திட்டமிடல் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில் மட்டுமே நாம் இருக்கிறோம் எனவே இந்த துறையில் நல்ல வேலை வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications