பங்குச் சந்தை தரகு நிறுவனமான ஜெரோதா-வின் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிதின் கமத், ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வேளையில் STT (Securities Transaction Tax) உயர்வு அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ட்வீட்டில் குற்றம்சாட்டியுள்ளார்.
நிதின் காமத் தனது டிவிட்டர் பதிவில் பட்ஜெட் 2024இல் எஃப் அண்ட் ஓ (F&O) வர்த்தகத்தில் STT 60 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஃபியூச்சர்ஸ் வரி 0.0125%லிருந்து 0.02%க்கும், ஆப்ஷன்ஸ் வரி 0.0625%லிருந்து 0.1%க்கும் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு ஆரம்பத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய பங்குச்சந்தையில் புல் மார்க்கெட் தொடர்ந்தது. ஆனால் சந்தை எப்போதும் உயர்ந்து கொண்டே இருக்காது. கடந்த ஆண்டு இந்த உயர்வின் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது என்று நிதின் கமத் கூறியுள்ளார்.

2025-26 நிதியாண்டுக்கு STT வசூல் இலக்கு ரூ.78,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 11 வரை வசூலான தொகை சுமார் ரூ.45,000 கோடி. மார்ச் 31 வரை இன்னும் ரூ.12,000 கோடி வசூலானாலும் மொத்தம் ரூ.57,000 கோடி மட்டுமே இருக்கும். இது மத்திய அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட 25 சதவீதம் குறைவு. STT உயர்த்தப்படாமல் இருந்திருந்தால் அரசு இன்னும் அதிகம் வசூலித்திருக்கும் என்று நிதின் கமத் கருத்து தெரிவித்துள்ளார்.
STT 2004இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது LTCG (Long Term Capital Gains) வரி 0% ஆக குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது LTCG திரும்பி வந்துவிட்டது. STT தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று நிதின் கமத் வேதனை தெரிவித்தார்.
சந்தை பங்கேற்பாளராக தான் எப்போதும் STT குறைய வேண்டும் என்று நம்புவதாகவும், ஆனால் அது தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் கூறினார்.
இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் வேளையில், இந்த பட்ஜெட்டில் LTCG, STCG, STT ஆகியவை குறைக்க வேண்டும் என கருத்து நிலவி வரும் வேளையில் நிதின் காமத் பதிவு வந்துள்ளது.
பல முதலீட்டாளர்கள் STT உயர்வால் F&O வர்த்தக அளவு குறைந்ததாகவும், சந்தை பங்கேற்பு பாதிக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு இந்த பட்ஜெட்டில் STT-ஐ குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும் பங்குச்சந்தை தரகு நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் நிதின் காமத் தனது கருத்து சுயநலமானது என்றும் தனது பதிவில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அதானது தனது ஜெரோதா நிறுவனத்தில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாலர்கள் STT குறைந்தால் அதிகம் வர்த்தகம் செய்வார்கள் இதன் மூலம் தனக்கு பயன் இருக்கும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதை தான் சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார். இந்த விவாதம் பட்ஜெட் 2026க்கு முன் STT குறைப்பு குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சாதாரண முதலீட்டாளர்களுக்கு இது முக்கியம். STT உயர்வால் வர்த்தக செலவு அதிகரிக்கிறது. F&O வர்த்தகம் குறைவதால் சந்தை பங்கேற்பு குறையலாம். அரசு வசூல் குறைவதால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு பாதிக்கலாம். STT குறைப்பு வந்தால் வர்த்தகம் அதிகரிக்கும். முதலீட்டாளர்களுக்கு செலவு குறையும். பங்குச் சந்தை உயிர்ப்புடன் இருக்கும் என்பது தான் தற்போதை கருத்து.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications