சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் Zoho நிறுவனத்தில் இதுவரையில் நடந்திடாத வகையில் மிகப்பெரிய அளவிலான தலைமை மாற்றம் நடைபெற்றுள்ளது. ஜனவரி 27 ஆம் தேதி டிவிட்டரில் தற்போதைய சிஇஓவான ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் தான் சிஇஓ பதவியில் இருந்து விலகிவிட்டு Chief Scientist என்ற புதிய பதவியை ஏற்க உள்ளதாக அறிவித்தார்.
இப்பதவியில் ஸ்ரீதர் வேம்பு சோஹோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) முயற்சிகளுக்குத் தலைமை தாங்குவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் Zoho நிறுவனம் இனி வரும் காலகட்டத்தில் R&D துறையில் அதிகப்படியான கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது உறுதியாகிறது. இதேவேளையில் ஸ்ரீதர் வேம்பு-வின் சிஇஓ பதவிக்கு வருபவர் தான் ஷைலேஷ் குமார் டேவி. யார் இவர்..?

சென்னையில் இருந்துகொண்டு 50க்கும் அதிகமான நாடுகளில் சாப்ட்வேர் சேவை அளித்து வருவது மட்டும் அல்லாமல் சேல்ஸ்போர்ஸ், ஜென்டெஸ்க் போன்ற பன்னாட்டு நிறுவனத்துடன் போட்டிப்போடும் SAAS சாம்ராஜ்ஜியமாகவும் ZOHO விளங்குகிறது. ZOHO நிறுவனம் பிற டெக் ஸ்டார்ட்அப் போல் அல்லாமல் பூட்ஸ்டார்ப் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்ஜியம், இந்த மாபெரும் வளர்ச்சியில் ஸ்ரீதர் வேம்பு உடன் துணையாக இருந்தவர் தான் ஷைலேஷ் குமார் டேவி.
ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் ZOHO-வின் புதிய குரூப் சிஇஓ-வாக ஷைலேஷ் குமார் டேவி பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவித்தார். ஷைலேஷ் குமார் டேவி Zoho நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
ஷைலேஷ் குமார் டேவி - யார் இவர்?
ஷைலேஷ் குமார் டேவி-யின் லிங்க்டின் ப்ரொபைல் தகவல் படி, அவர் IIT கல்லூரியில் உலோகவியலில் இளநிலை பட்டமும் (B.Tech), ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் தொழிற்துறை மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் (M.Tech) பெற்றுள்ளார்.
ஷைலேஷ் குமார் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், Zoho நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை பிரிவான ManageEngine-இல் இன்ஜினியரிங் பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றினார்.
Zoho நிறுவனத்தின் மொத்த இன்ஜினியரிங் பிரிவை நிர்வாகம் செய்த அனுபவம் ஷைலேஷ் குமாருக்கு உள்ளது, இதோடு சோஹோ-வின் இணை நிறுவனராக இந்நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதையில் முக்கிய பங்காற்றியவர். இதனாலேயே நிறுவனத்தை எதிர்காலத்திற்கு வழிநடத்தும் உரிமையும், தகுதியையும் ஷைலேஷ் குமார் பெற்றுள்ளார்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications