செயற்கை நுண்ணறிவு (AI) பல வேலைகளை மாற்றிவிடும் அல்லது நீக்கிவிடும் என்ற அச்சம் உலகெங்கும் பரவி வரும் நிலையில், Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஒரு முக்கியமான கருத்தை X-இல் பகிர்ந்துள்ளார். AI பல தொழில்களை ஆட்டிப் படைத்தாலும், மனிதர்களின் சுயமதிப்பு, பணம் சாராமல் இருக்கும் பணிகள் என்றென்றும் நீடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நமது சுயமதிப்பு நாம் சேர்க்கும் பொருளாதார மதிப்பிலிருந்து வருகிறது என்றால், அல்லது நமது அறிவாற்றல் மூலம் வருகிறது என்றால், AI நமது சுயமதிப்புக்கு பெரும் சவாலாக இருக்கும்" என்று ஸ்ரீதர் வேம்பு தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்துக்காக செய்யப்படாத பல வேலைகள் AI-யால் பாதிக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

உதாரணமாக குழந்தைகளை பராமரிப்பது, குழந்தைகளுக்கு கற்பிப்பது, முதியோரை பராமரிப்பது, நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு விவசாயத்துக்கு திரும்புவது, காட்டில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றுவது, கோயில் பூசாரிகள் யாரும் வராவிட்டாலும் தினசரி சடங்குகளை செய்வது, கிளாசிக்கல் இசைக் கலைஞர்கள் தினமும் பயிற்சி செய்து சிறிய எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருந்தாலும் கச்சேரி நடத்துவது போன்றவை பணத்துக்காக செய்யப்படுவதில்லை என்று அவர் எடுத்துக்காட்டாக கூறுகிறார். இத்தகைய பணிகளைச் செய்பவர்கள் AI-யால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார்.
மனிதர்கள் எதிர்காலத்தில் இத்தகைய பணிகளை மையமாகக் கொண்டு வாழலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். பணத்தால் அளக்க முடியாத மதிப்பு கொண்ட பணிகள் மனித இயல்போடு பின்னிப்பிணைந்தவை என்பதால், அவை AI-யால் மாற்றப்பட முடியாது என்று அவர் வலியுறுத்துகிறார்.
மொத்தத்தில், ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்து AI-யின் எல்லைகளை தெளிவுபடுத்தும் வகையில் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்கருத்துக்கள் இருந்து வருகிறது. பணம் சார்ந்த வேலைகள் மாறலாம், ஆனால் மனித இயல்போடு இணைந்த பணிகள் என்றும் நிலைத்திருக்கும் என்பதே ஸ்ரீதர் வேம்பு கருத்து.
இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் பலரும் விவாதம் நடத்தி வருகின்றனர்.
சிலர் இதை வெறும் கற்பனை என்று விமர்சித்தனர்.
வினோத் என்பவர், "இளைஞர்களை குறைந்த மதிப்பு சேர்க்கும் வேலைகளை செய்யச் சொல்வது முரண்பாடு அல்லவா? நீங்கள் உலக வாடிக்கையாளர்களுக்கு AI சேவை அளித்து டாலரில் சம்பாதித்து ரூபாயில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறீர்களே" என்று கேள்வி எழுப்பினார்.
விஷ்ணு அகர்வால் என்ற பயனர், "பணம் சார்ந்த பொருளாதாரம் இல்லாமல் பேஷன் சார்ந்த பணிகள் நீடிக்க முடியாது. ரெனசான்ஸ் ஃப்ளோரன்ஸ் பாருங்கள் - மெடிசி வங்கி குடும்பத்தின் பெரும் செல்வம் தான் அந்த கலைஞர்கள், இசைக்கலைஞர்களை ஆதரித்தது. AI நமது முதன்மை பொருளாதார இயந்திரங்களை சிதைத்தால், அந்த ஆதரவு செல்வம் மறைந்துவிடும்" என்று விமர்சனம் செய்தார்.
சாலிக் ஷா என்ற பயனர், "உலகம் இன்னும் முழுமையடையவில்லை. நகரங்களை மீண்டும் கட்டமைக்கலாம், புதிய பிரச்சினைகளுக்கு புதிய வேலைகள் உருவாகும். முன்பு விலை அதிகம் அல்லது மாற்று வழி இல்லாத பிரச்சினைகளை இப்போது தீர்க்கலாம்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
மொத்தத்தில், ஸ்ரீதர் வெம்புவின் கருத்து சிலருக்கு ஆறுதலாகவும், சிலருக்கு முரண்பாடாகவும் தோன்றியுள்ளது.
More From GoodReturns

16,000 பேரின் வேலை காலி.. மெட்டா நிறுவன சிஇஓ மார்க்-ஐ திட்டி தீர்க்கும் ஊழியர்கள்..!!

தோசை, பிரியாணிய விட்டுத் தள்ளுங்க: AI வளர்ச்சியையும் பதம்பார்க்கும் ஈரான் பிரச்சனை? எப்படி?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications