இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான ஜோஹோ செயல்பட்டு வருகிறது. அண்மை காலமாக இந்தியாவில் ஜோஹோ நிறுவன தயாரிப்புகளை மக்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் பலரும் தாங்கள் ஜோஹோ மெயிலை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக அண்மையில் அறிவித்தனர். வாட்ஸ் அப் போலவே ஜோஹோ உருவாக்கிய அரட்டை செயலி கடந்த மாதம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக இந்தியர்கள் பலரும் அரட்டை செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும், ஜோஹோவின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிட கூடிய பதிவு லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெறும். ஜோஹோவை பொறுத்தவரை ஊழியர்களுக்கு நிறுவன பங்கில் ஒரு பகுதி, சம்பளம், போனஸ் என வாரி வழங்குகிறது. பலரும் எப்படியாவது இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என எண்ணுகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு ஜோஹோவில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோவின் ஃப்ளாக்ஷிப் இமெயில் சேவையான ஜோஹோ மெயில் ஆண்டுக்கு 100 மில்லியன் வருவாய் என்பதை நெருங்கி விட்டதாகவும் இதன் 70 சதவீத வணிகம் என்பது இந்தியாவிற்கு வெளியில் தான் நடக்கிறது என்றும் பதிவு செய்திருந்தார்.
உலகிலேயே பாதுகாப்பான ஈமெயில் ப்ரொவைடராக ஜோஹோ மெயில் மாறி இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்தியாவை பெருமைப்படுத்துகிறோம் எங்களின் வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியடைய செய்கிறோம் என குறிப்பிட்டு இருக்கும் ஸ்ரீதர் தங்களின் anti spam system எவ்வாறு செயல்படுகிறது இதன் நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் உறுதி செய்யும் படத்தையும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோஹோ மெயில் malware மற்றும் Phishingh mailகளை 99% பிளாக் செய்வதாகவும் இதன் விபி ஸ்பேம் சர்டிபிகேஷன் மதிப்பு 99.329 என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து பதிவு செய்திருக்கும் ஸ்ரீதர் வேம்பு , ஜோஹோ நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் தானே தனிப்பட்ட முறையில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும், மிகச்சிறந்த வலுவான கணித திறன் கொண்ட நபர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நிறுவனத்தில் என்னுடைய பெரும்பாலான வேலை என்பது தொழில்நுட்ப பாதையை கண்டறிவதாக தான் இருந்திருக்கிறது, எங்களுக்கு தற்போது கணிதத்தில் மிகச்சிறந்த திறன் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள் உங்களுக்கு அந்த திறன் இருந்தால் எனக்கே நேரடியாக மெசேஜ் அனுப்புங்கள் என கூறியிருக்கிறார். கணித சமன்பாடுகளை கண்டால் உங்களுக்கு அச்சமில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் வேலைவாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications