இந்திய பணக்கார பட்டியலில் இருக்கும் பெரும்பாலான ஆண் மற்றும் பெண் பில்லியனர்கள் அனைவரும் குடும்ப வர்த்தகம், குடும்பச் சொத்துக்கள் உடன் இடம்பெற்றவர்கள். சொந்தமாக வர்த்தகத்தைத் துவங்கி பில்லியனர் என்ற மிகப்பெரிய உச்சத்தை அடைந்தோர் எண்ணிக்கை குறைவு தான். அதிலும் குறிப்பாகப் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்தியாவில் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியின் காரணமாகத் தற்போது சுயமாகப் பில்லியனரானோர் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இப்படிப் பெண்கள் பட்டியலில் புதிதாக இணைந்தவர் தான் ராதா வேம்பு.. யார் இவர்..?
பால்குனி நாயர்
இந்தியாவில் சுயமாகப் பில்லியனர் நிலையை அடைந்த பெண்கள் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் எப்போதும் பயோகான் தலைவர் கிரண் மசூம்தார் ஷா முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது நைகா நிறுவனத்தின் ஐபிஓ மூலம் அதன் தலைவர் பால்குனி நாயர் 5.5 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்தைப் பிடித்தார்.
ராதா வேம்பு
இந்நிலையில் சுயமாகப் பில்லியனர் நிலையை அடைந்த பெண்கள் பட்டியலில் 3வதாகத் தற்போது 1.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இடம்பெற்றுள்ளார் ராதா வேம்பு. யார் இந்த ராதா வேம்பு என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இவருடைய பெயர் அதிகம் பிரபலமானது இல்லை என்பது தான்.
Zoho கார்ப் நிறுவனம்
Zoho Corporation நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் 49 வயதான ராதா வேம்பு ஜோஹோ மெயில் சேவையின் ப்ராடெக் மேனேஜர் ஆக உள்ளார். Zoho தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பிரபலமான நிறுவனம். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சுமார் 12 நாடுகளில் அலுவலகங்களை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.
ஸ்ரீதர் வேம்பு
ராதா வேம்பு ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பை முடித்தவர். Zoho நிறுவனத்தின் நிறுவிய ஸ்ரீதர் வேம்பு, ராதா வேம்புவின் சசோதரர் ஆவார். திருமணமாகி சென்னையில் வசித்து வரும் ராதா வேம்பு வெளியுலகில் பெரிய அளவில் பிரபலம் இல்லை, சமுக வலைத்தளத்தில் கூட அவர் இல்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications