இதென்ன தீபாவளி பரிசா.. பிளாட்பார்ம் கட்டணத்தை 6ல் இருந்து 10 ஆக உயத்திய Zomato..!

சென்னை: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) திடீரென ஃபிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் வீட்டில் இருந்தபடியே நாம் நமக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து டெலிவரி பெற்றும் கொள்ளும் வசதி இருக்கிறது. சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

தற்போது பண்டிகை காலம் வர இருக்கும் சூழலில் திடீரென சோமேட்டோ நிறுவனம் தங்களுடைய செயலியில் தற்காலிகமாக பிளாட்பார்ம் கட்டணத்தை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது பிளாட்பார்ம் கட்டணம் ஒரு ஆர்டருக்கு 6 ரூபாய் என இருக்கும் நிலையில் அதனை 10 ரூபாய் என உயர்த்தியுள்ளது.

இதென்ன தீபாவளி பரிசா.. பிளாட்பார்ம் கட்டணத்தை 6ல் இருந்து 10 ஆக உயத்திய Zomato..!

அதாவது ஏற்கனவே இருந்ததைவிட கிட்டத்தட்ட 60 % பிளாட்பார்ம் கட்டணத்தை டொமேட்டோ உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக சோமேட்டோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேசனை அனுப்பியுள்ளது.

சோமேட்டோ செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய பாப் அப் மூலம் பிளாட்பார்ம் கட்டண உயர்வு பற்றிய தகவல் அளித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டிபிகேஷனில் பண்டிகை காலத்தில் சிறப்பான சேவைகளை வழங்கவும், செயல்பாட்டு செலவுகளை ஈடு கட்டவும் இந்த கட்டண உயர்வு அவசியம் என சோமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது இந்த கட்டணமானது பண்டிகை காலத்தில் சேவையை இயக்குவதற்கான கட்டணத்தை செலுத்த எங்களுக்கு உதவுகிறது, பண்டிகை காலங்களில் சேவைகளை தொடரவும் பிளாட்பார்ம் கட்டணத்தை சற்றே அதிகரித்துள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோமேட்டோ நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பிளாட்பார்ம் கட்டணம் என்ற ஒரு புதிய கட்டணத்தை அறிமுகம் செய்தது. அப்போதிலிருந்து தற்போது வரை படிப்படியாக பிளாட்பார்ம் கட்டணத்தை சோமேட்டோ உயர்த்தி வருகிறது. தற்போது அதனை 10 ரூபாய் என அதிகரித்துவிட்டது. சோமேட்டோ நிறுவனம் 2023இல் பிளாட்பார்ம் கட்டணத்தை அதிகரித்து அறிவித்ததில் இருந்து அதன் போட்டி நிறுவனமான ஸிவிக்கியும் பிளாட்பார்ம் கட்டணத்தை அறிவித்தது.

தற்போது ஸ்விக்கியை பொருத்தவரை ஒரு ஆர்டருக்கு ரூ. 6.50 ஐ பிளாட்பார்ம் கட்டணமாக வசூலிக்கிறது. பிளாட்பார்ம் கட்டணம் என்பது ஒவ்வொரு உணவு ஆர்டர்களுக்கும் அந்த உணவுக்கான கட்டணம் ,ஜிஎஸ்டி மற்றும் டெலிவரி கட்டணம் ஆகியவற்றின் மீது கூடுதலாக விதிக்கப்படக் கூடிய ஒரு கட்டணமாகும்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 20 லட்சம் முதல் 25 லட்சம் உணவு ஆர்டர்கள் இதுபோன்ற செயலிகள் வாயிலாக பெறப்படுகின்றன. இதுபோல பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இந்த நிறுவனங்களின் வருவாய் கணிசமான அளவு அதிகரிக்கிறது. அதுவும் தீபாவளி பண்டிகை காலத்தில் அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் சோமேட்டோ இப்படி கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+