கடந்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட மல்டிபேக்கர் தரத்துக்குப் உயர்ந்துள்ளது சோமேட்டோ பங்குகள். ஆன்லைன் உணவு டெலிவரி தளமான Zomato மீதான முதலீட்டை மியூச்சுவல் ஃபண்டுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே காரணம் கடந்த காலாண்டில் முதல் முறையாக லாபத்தை வெளியிட்டது தான்.
இந்த புதிய-யுக தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்த இந்திய முதலீட்டாளர்களுக்கு, முதல் முறையாக லாபத்தை கொடுத்தன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 80 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளை வாங்கியதால் சோமேட்டோ பலரின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது.

இது கடந்த மாதத்தை விட 30% அதிகமாகும். மியூச்சுவல் பண்டுகள் தற்போது சோமேட்டோ நிறுவனத்தில் சுமார் 789 மில்லியன் பங்குகளை வைத்துள்ளனர், இதன் மதிப்பு ரூ.7,700 கோடி ஆகும்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL), நெஸ்லே இந்தியா போன்றவற்றுடன், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஃபண்ட் ஹவுஸால் சேர்க்கப்பட்ட முக்கிய பங்குகளாக Zomato உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஜேஎம் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய மூன்று முதலீட்டு நிறுவனங்கள் சோமேட்டோ-வை சிறந்த தேர்வுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர்.
ஆக்சிஸ் எம்எப் ரூ.226 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியபோது, பிராங்க்ளின் ரூ.73 லட்சம் மற்றும் ஜேஎம் மியூச்சுவல் பண்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பங்குகளை வாங்கியது. இந்த ஆண்டு இதுவரை சோமேட்டோவின் பங்குகள் சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு வளர்ச்சியை தாண்டியது மட்டும் அல்லாமல் new-age பிரிவில் இருக்கும் நிறுவன பங்குகள் விட சிறப்பாக செயல்பட்டன.
இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களில், சோமேட்டோ பங்குகள் 96% உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளில் வலுவான நிதி செயல்திறன் மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக விலை உயர்வு முக்கியமாக இருந்தது.
ஜூன் காலாண்டில், ஒரு வருடத்துக்கு முன்பு 186 கோடி ரூபாய் நஷ்டம், மற்றும் ஒரு காலாண்டுக்கு முன்பு 189 கோடி ரூபாய் நஷ்டம் என்று ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 2 கோடி ரூபாய் ஆச்சரியமான நிகர லாபத்தை Zomato அறிவித்தது. இது வருவாயில் 71% வளர்ச்சி கண்டு ரூ.2,416 கோடியாக இருந்தது.
ஆரோக்கியமான வருவாய் வளர்ச்சி மற்றும் விளிம்புகளில் சிறப்பான முன்னேற்றம் ஆகியவற்றால் வலுவான வருவாய் ஆதரிக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸின் சினேகா போடார் கூறுகையில், வாலட் ஷேர் ஆதாயங்களால், அடுத்த நான்கு காலாண்டுகளில் நிறுவனம் முறிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வாளர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உணவு விநியோக வணிகத்தில் வருவாயில் 25% CAGR வளர்ச்சியை எதிர்பார்க்கும் அதே வேளையில், 125 ரூபாய் விலை இலக்குடன் பங்குகளின் "வாங்க" மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
Trendlyne தரவுகளின்படி, நிறுவனத்தின் சராசரி இலக்கு விலை ரூ.125 மற்றும் ஒருமித்த மதிப்பீடு தற்போதைய நிலைகளில் இருந்து 26% உயர்வைக் குறிக்கிறது.


Click it and Unblock the Notifications