ஒவ்வொரு புத்தாண்டுக்கும் உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஆண்டிலேயே அதிகப்படியான ஆர்டர் வரும் ஒரு நாள். இந்த முக்கிய நாளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை டெலிவரி ஊழியர்கள் அறிவித்த நிலையில், மக்கள் தற்போது அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையை உடனடியாக சமாளித்து, டெலிவரி ஊழியர்களை பணிக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கி சேவையை தொடர வலியுறுத்தி வருகிறது.

தெலங்கானா கிக் அண்ட் பிளாட்ஃபார்ம் வொர்க்கர்ஸ் யூனியன் (TGPWU) மற்றும் Indian Federation of App-Based Transport Workers ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. டெலிவரி ஊழியர்களின் குறைந்துவரும் ஊதியம், நீண்ட வேலை நேரம், பாதுகாப்பின்மை மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாதது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை இன்று நடத்தி வருகிறது.
இந்த போராட்டத்தில் சுமார் 1.7 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள வேளையில் குவிக் காமர்ஸ் மற்றும் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
டிசம்பர் 25 அன்று நடந்த முந்தைய போராட்டத்தைத் காட்டிலும் இன்று போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெலிவரி நிறுவனங்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
புதிய ஊக்கத்தொகை
சோமாட்டோ நிறுவனம் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான நேரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு டெலிவரிக்கும் ரூ.120 முதல் ரூ.150 வரை ஊதியம் வழங்க உள்ளதாக அறிவித்துல்ளது. மேலும், ஆர்டர் ரத்து அல்லது மறுப்புக்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒரு டெலிவரி ஊழியர் ரூ.3,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான் போன்ற முக்கியமான பண்டிகை காலத்தில் ஆன்லைன் ஆர்டர் அதிகமாக வரும் நாட்களில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை என்று சோமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஸ்விக்கி நிறுவனம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு நாட்களிலும் சேர்த்து ரூ.10,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 முதல் 12 மணி வரை ரூ.2,000 வரை கூடுதல் ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோன்று அதிக ஆர்டர் வரும் காலங்களில் ஊக்கத்தொகை அதிகரிப்பது இத்தகைய டெலிவரி நிறுவனங்களின் வழக்கமானது.
டெலிவரி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் சோமேட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ போன்ற உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் சேவைகள் காலை முதல் கடுமையாக வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications