டெலிவரி ஊழியர்களின் போராட்டத்தை நூதன முறையில் தடுப்பு.. 6 மணிநேரத்தில் ரூ.3000 வருமானம் அறிவிப்பு..!!

ஒவ்வொரு புத்தாண்டுக்கும் உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஆண்டிலேயே அதிகப்படியான ஆர்டர் வரும் ஒரு நாள். இந்த முக்கிய நாளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை டெலிவரி ஊழியர்கள் அறிவித்த நிலையில், மக்கள் தற்போது அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையை உடனடியாக சமாளித்து, டெலிவரி ஊழியர்களை பணிக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கி சேவையை தொடர வலியுறுத்தி வருகிறது.

டெலிவரி ஊழியர்களின் போராட்டத்தை நூதன முறையில் தடுப்பு.. 6 மணிநேரத்தில் ரூ.3000 வருமானம் அறிவிப்பு..!

தெலங்கானா கிக் அண்ட் பிளாட்ஃபார்ம் வொர்க்கர்ஸ் யூனியன் (TGPWU) மற்றும் Indian Federation of App-Based Transport Workers ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. டெலிவரி ஊழியர்களின் குறைந்துவரும் ஊதியம், நீண்ட வேலை நேரம், பாதுகாப்பின்மை மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாதது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை இன்று நடத்தி வருகிறது.

இந்த போராட்டத்தில் சுமார் 1.7 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள வேளையில் குவிக் காமர்ஸ் மற்றும் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

டிசம்பர் 25 அன்று நடந்த முந்தைய போராட்டத்தைத் காட்டிலும் இன்று போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெலிவரி நிறுவனங்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

புதிய ஊக்கத்தொகை
சோமாட்டோ நிறுவனம் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான நேரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு டெலிவரிக்கும் ரூ.120 முதல் ரூ.150 வரை ஊதியம் வழங்க உள்ளதாக அறிவித்துல்ளது. மேலும், ஆர்டர் ரத்து அல்லது மறுப்புக்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஒரு டெலிவரி ஊழியர் ரூ.3,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான் போன்ற முக்கியமான பண்டிகை காலத்தில் ஆன்லைன் ஆர்டர் அதிகமாக வரும் நாட்களில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை என்று சோமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் ஸ்விக்கி நிறுவனம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு நாட்களிலும் சேர்த்து ரூ.10,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 முதல் 12 மணி வரை ரூ.2,000 வரை கூடுதல் ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோன்று அதிக ஆர்டர் வரும் காலங்களில் ஊக்கத்தொகை அதிகரிப்பது இத்தகைய டெலிவரி நிறுவனங்களின் வழக்கமானது.

டெலிவரி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் சோமேட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ போன்ற உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் சேவைகள் காலை முதல் கடுமையாக வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+