கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் வேகமாகவும், இந்திய மெல்ல மெல்ல கடந்து வருகிறது. இந்தியாவில் வேக்சின் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் அடுத்தடுத்து புதிய வேக்சினுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது.
இந்நிலையில் உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ வேக்சின்-ஐ அகமதாபாத்-ல் இருக்கும் பார்மா நிறுவனமான சைசஸ் கேட்லியா உருவாக்கியுள்ளது.
ZyCoV-D வேக்சின்
பொதுவாகக் கேவிட் வேக்சின் அனைத்தும் 2 டோஸ் கொண்டதாக இருக்கும் நிலையில், சைசஸ் கேட்லியா 3 டோஸ் கொண்டதாக ZyCoV-D வேக்சின் உள்ளது. இந்த வேக்சின் சிம்டோமேட்டிக் கொரோனா பாதிப்பு உடையோருக்கு 66.6 சதவீதம் செயலாற்றுவதாகவும், குறைந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு 100 சதவீதம் செயலாற்றுவதாக அறிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு வேக்சின்
அனைத்திற்கும் மேலாகச் சைசஸ் கேட்லியா-வின் ZyCoV-D வேக்சின் 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்குச் செலுத்த முடியும் என இந்தப் பார்மா நிறுவனம் கூறி வருகிறது. கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனச் சில கணிப்புகள் கூறி வரும் நிலையில் சைசஸ் கேட்லியா-வின் ZyCoV-D வேக்சின் பெரிய அளவில் இந்திய மக்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது சோதனை கட்டம்
ஆனால் இந்த வேக்சின் இன்னும் சோதனை கட்டத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. 2வது சோதனை கட்டத்தில் இருக்கும் ZyCoV-D வேக்சின் 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒரு மாதத்திற்கு 1 கோடி வேக்சின்
இந்தியாவில் வேக்சின் தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தி அதிகப்படுத்தப் போராடி வரும் நிலையில் 3 டோஸ் கொண்ட ZyCoV-D வேக்சினை ஒரு மாதத்திற்கு 1 கோடி வேக்சின் தயாரிக்க முடியும் எனச் சைசஸ் கேட்லியா தெரிவித்துள்ளது.
12 கோடி வேக்சின்
2021 டிசம்பர் மாதத்திற்கு 5 கோடி வேக்சினையும், ஒரு வருடத்திற்கு 10 முதல் 12 கோடி வேக்சினையும் தயாரிக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.