சென்னை: நம்ம நாட்ல கிரெடிட் கார்டு (credit card) பில் கட்டி அழிஞ்சவங்க கணக்கு சொல்லி மாளாது.. கிரெடிட் கார்டில் நாம் வைத்திருக்கும் பேலன்ஸ் நம் நிதி நிலையில் பெரும் பங்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
கிரெடிட் கார்டு பேலன்ஸ் தொகைக்கு, வங்கிகள் வருடத்திற்குச் சுமார் 36 முதல் 40 சதவிகித வட்டியை வசூலித்து வருகிறது.
நீங்கள் திடீரென்று உங்களுடைய கிரெடிட் கார்டு பாக்கியை செலுத்த முடிக்காமலேயே இருப்பதை உணர்வீர்கள். ஏனென்றால் பேலன்ஸ் வைத்திருக்கும் தொகைக்கான வட்டி மிகவும் அதிகமாக உள்ளதால் காலம் முழுக்க வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு இருப்போம். இந்த நிலையை அப்படியே தொடர்வது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று தான் கூற வேண்டும். இதைச் சரி செய்ய வேறொரு வழி உள்ளது. உங்களுடைய கிரேடிட் கார்டு பேலன்ஸ் தொகையை ஒரு தனிநபர் கடனாக மாற்றுங்கள் (personal loan). பெரும்பாலான வங்கிகள் உங்கள் கிரெடிட் கார்டு பாக்கியை ஒரு தனிநபர் கடனாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு பில்களைச் சரியாகச் செலுத்தி வந்தால் வங்கியிலிருந்து உங்களை அழைத்து உங்கள் பாக்கியை மாதாந்திர தவணையில் செலுத்தும் ஒரு கடனாக மாற்றிக்கொள்ள விருப்பமுள்ளதா என உங்களைக் கேட்கவும் செய்கிறார்கள். கிரெடிட் கார்டு பேலன்ஸ் தொகை மிகவும் குறைவாக இருக்கும் போது மட்டுமே, வங்கிகள் மேலும் உங்களைக் கடனாளியாக்க பேலன்ஸ் தொகையோடு கூடதல் கடன் அளிப்பதாக ஆசை காட்டி மோசம் செய்வார்கள். கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள் தனி நபர் கடனுக்கு வருடத்திற்கு 14-18 சதவிகிதம் வரையிலான வட்டியை வசூலிக்கின்றன. அவ்வாறு நீங்கள் மாற்றிக்கொள்ள நினைத்தால் அதற்கான சேவை வரியையும் நீங்கள் செலுத்த நேரிடும். இது 36 முதல் 40 சதவிகித வட்டியை ஒப்பிடும் போது பல மடங்கு குறைவு. நீங்கள் மாத தவணையை உரிய நேரத்தில் செலுத்துபவராகவோ அல்லது கடன் நம்பகத்தன்மைக்கு உரியவராகவோ இருந்தால் மட்டுமே வங்கிகளில் இருந்து இத்தகைய அழைப்பு வரும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒரு கடனை வைத்திருந்து மாதாந்திர செலவுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும் என்றால், அவர்கள் உங்களைக் கடனை நீட்டிக்கச் சொல்லி நிர்பந்தம் செய்யலாம் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு பாக்கியை செலுத்த முடியாத நிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற தனிநபர் கடன்களை நாடுவது நல்லது. எது எப்படி இருந்தாலும் செலவுகளைக் கவனமாகச் செய்யுங்கள்..கஷ்டங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்..
காலம் முழுக்க வட்டி மட்டும் தான்...
சூப்பரான வழி
தனி நபர் கடன்
வங்கியில் இருந்து அழைப்பு
இந்த அழைப்பு எப்போது வரும்...
வட்டி வகிதம்
மிகவும் குறைவு..
மாத தவணை
உஷார் மக்களே
முடிவுரை
உஷார்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications