சென்னை: நம்மில் பலருக்கும் சொந்த வீடு என்பது ஒரு கனவு. நம்முடைய கனவை நனவாக்க தற்பொழுது ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. அதில் மிக முக்கியமனது வீட்டுக்கடன்.
தற்பொழுது வங்கிகள் வீட்டுக்கடன் நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தி விட்டன. எனினும் நாம் சில விதிமுறைகளை நிறைவேற்றத் தவறினால், வங்கிகளால் நம்முடைய வீட்டு கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன.
இந்நிலையில் வங்கிளில் வீட்டு கடன் பெறுவதற்கான தகுதிகளை பற்றி தெரிந்துக் கொண்டு சரியான முறையில் விண்ணப்பம் சமர்பித்து உங்கள் கனவு வீட்டை கட்டுங்கள்.
அங்கிகாரம்
முதலில் வங்கிகள் உங்களுடைய கடன் திரும்பச் செலுத்தும் திறன், உங்களுடைய நிகர வருமானம், மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் மொத்த கடன் தொகை ஆகிவற்றை பொருத்தே வங்கிகள் உங்களது கடன் விண்ணப்பத்தை அங்கிகரிக்கும்.
அடிப்படை தகுதிகள்
வீட்டு கடன் பெற வங்கிகள் மிக முக்கியமாக 5 தகுதிகளை நிர்ணயித்துள்ளன.
1. ஒரு மாதத்தின் நிகர வருமானத்தை போன்று 60 மடங்கு வரை கடன் பெற உங்களுக்கு தகுதி உள்ளது.
2. வங்கிகள் உங்களுகடைய பிற கடன்கள், மற்றும் உங்களுடைய மாதந்திர தவணைகள் போன்றவற்றை கழித்து விட்டே உங்களுடைய நிகர வருமானத்தை கணக்கிடும்.
3. உங்களுடைய மோசமான கடன் (சிபில் ) மதிப்பெண் அல்லது நீங்கள் சில முறை கடன் தவணைகளை கட்டத் தவறியிருத்தல் போன்றவை உங்களுடைய கடன் பெரும் முயற்ச்சியை சிரமப்படுத்தும்.
4. நீங்கள் நீண்ட கால கடன் திருப்பிச் செலுத்தும் காலத்ததை தேர்ந்தேடுத்தால், அது உங்களுடைய கடன் தகுதியை அதிகரிக்கும்.
5. கடன் தகுதி என்பது ஊதியம் பெறுபவர்களுக்கும்கும் இடையே வேறுபடுகின்றன.
வாழ்க்கைச் செலவினம்
வங்கிகள் பொதுவாக ஒரு தனிநபரின் வாழ்க்கைச் செலவினம் என்பது ஒரு தனிநபரின் வருவாயில் சுமார் 40 சதவீதம் எனக் கருதுகின்றனர்.
உதாரணமாக ஒரு தனி நபர் ஒவ்வொரு மாதமும் ரூ 60,000 சம்பாதிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருடைய வாழக்கை செலவினமாக ரூ .25,000 கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் அவர் இதர மாதந்திர தவணையாக ரூ .20,000 செலுட்டுகின்றார் எனில், அவருடைய கடன் தகுதியாக ரூ .15,000 நிர்ணயிக்கப்படும்.
வீட்டுக் கடன் தகுதி
வீட்டுக் கடன் தகுதி = ஒரு லட்சத்திற்கான மாதாந்திர சேமிப்பு அல்லது மாதாந்திர தவணை (இஎம்ஐ) X 1 லட்சம்
உதாரணமாக ஒருவர் 10 சதவீதம் வட்டி விகிதத்தில் சுமார் 20 ஆண்டுகள் தவணையில் ரூ ஒரு லட்சம் கடன் வாங்குகின்றார் எனில் அவருடைய மாதத்தவணை என்பது ரூ 965 ஆக இருக்கும்.
மேலே கூறிய உதரணத்திற்கு, நம்முடைய சூத்திரம் பயன்படுத்தப்படுத்தினால் அவாருடைய மொத்த வீட்டுக் தகுதியானது ( 15,000 / 965 X ரூ 1 லட்சம் = ரூ 15.54 லட்சம்) ரூ 15.54 லட்சமாக இருக்கும்.
இதர கட்டணங்கள்
வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் அந்த வங்கியினுடைய செயலாக்க கட்டணம், வட்டி விகிதங்கள், கடனை அனுமதிக்கும் கால அளவு போன்ற விஷயங்களை சரிபார்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
இவைகளெல்லாம் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே வேறுபடுகின்றன என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.
40 முதல் 50 சதவீதம்
வங்கிகள் பொதுவாக, ஒரு தனி நபர் தன்னுடைய வருமானத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை வீட்டு கடனுக்காக செலவழிக்க முடியும் என்று கருதுகின்றனர்.
ஈஎம்ஐ
மாதாந்திர தவணை கட்டத் தவறினால் அது அதிக வட்டி விகிதத்திற்கு வழி வகுக்கும். அது வருடத்திற்கு மிக அதிகமாக 24 சதவீதமாகக் கூட இருக்கலாம்.
முக்கிய ஆவணங்கள்
மாத ஊதியம் பெறும் தனிநபர்கள் வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய மிக முக்கிய ஆவணங்கள்:
1) விண்ணப்பித்தவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம்.
2) கடந்த மூன்று மாதங்களுக்கான சம்பள அறிக்கை. இதுவங்கிகளுக்கு இடையே வேறுபடலாம். சில வங்கிகள் ஆறு மாத சம்பள அறிக்கையை கேட்கலாம்.
3. படிவம் 16 அல்லது வருமான வரி தாக்கல் செய்த அறிக்கை. இது கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.
4. வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் உங்களுடைய கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி நிதி நிலை அறிக்கையை கேட்கும்.
5. உங்களுடைய அடையாள, வயது மற்றும் குடியிருப்பு சான்று.
6. நடைமுறைப்படுத்துவதற்காண கட்டணம் அல்லது காசோலை.
ஏன் வீட்டுக் கடன்..?
நீங்கள் வீட்டு கடன் முலமாக மிகப்பெரிய வருமான வரி சேமிப்பு நன்மைகளைப் பெற முடியும். வருமான வரியில் வீட்டுக் கடனுக்கான அசல் தொகையின் மீது ரூ 1.2 லட்சம் வரை சேமிக்க முடியும். இது தவிர, பணம் வீட்டுக் கடன் வட்டியின் மீது ரூ 2 லட்சம் வரை சேமிக்க முடியும்.
எனவே, வீட்டுக் கடன் என்பது ஒரு பெரிய வருமான வரி சேமிப்பு வழி.
முடிவு
நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்ததால் வீட்டுக் கடன் என்பது உங்களுக்கு நன்மையே தரும். மேலும், தற்பொழுது குறைந்து வரும் வட்டி விகிதங்கள், வீட்டுக் கடன்களை சாதகமானதாக மாற்றி இருக்கின்றன. முன்பு கூறியது போல, நீங்கள் இந்தியாவில் ஒரு வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுடைய தகுதியை சரிபார்க்க வேண்டும்.