அவசரக் காலங்களில் தனிநபர்கள் பலர் அவசரமாகத் தனிநபர் கடன் பெற முயல்கின்றனர். தனிநபர் கடன் பெறுவது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல, வட்டி அதிகம், மற்றும் மொத்த கடனையும் ஒரே தவணையில் செலுத்துவது போன்ற வசதிகள் இல்லை.
கடன் வாங்க நினைக்கும் தனிநபர்களுக்கு குறைவான வட்டியில் கடன் பெற மற்றும் தங்கள் இஷ்டம் போல் கடன் செலுத்தக்கூடிய பல கடன் திட்டங்கள் உள்ளன.
தனிநபர் கடனுக்கு மாற்றாக நீங்கள் எளிதாகப் பெற கூடிய 6 விதமான கடன்கள் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.
தங்கம் மீதான கடன்
தனிநபர் கடனுடன் ஒப்பிடும் போது தங்கம் மீதான கடன் பெறும் போது வட்டி குறைவே. பல நிதி நிறுவனங்கள், வங்கிகளில் செயலாக்க கட்டணம் வசுலிக்கப்படுவதில்லை.
தங்கம் மீதான கடன் பெற அடையாள அட்டை, பான் கார்டு, முகவரி சான்று போன்ற சில ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாகக் கடன் பெறலாம்.
ஓவர் டிராஃப்ட் வசதி
நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்களே அதில் 80 சதவீதம் வரை கடனாக பெறலாம்.
காப்பீடு பாலிசிகள் மீதான கடன் வாய்ப்பு
உங்கள் எல்ஐசி பாலிசியில் கடன் அளிக்கும் வாய்ப்பு இருக்கிறதென்றால் குறைந்த பட்ச கால அளவான 3 வருடம் முதலீடு செய்த பிறகு பாலிசியின் சரண்டர் மதிப்பில் 90 சதவீதம் வரை பெற இயலும்.
வீடு மீதான கடன்
ஒருவர் உங்கள் வீட்டின் மீது கடன் பெறலாம், ஆனால் கடன் தொகையைத் திருப்பி செலுத்தும் வரை உரிமையை அளிக்கவேண்டும்.
அதாவது மொத்த கடனையும் திருப்பிச் செலுத்தும் வரை வீட்டை விற்க இயலாது.
பங்குகள்/மியூச்சுவல் ஃபண்டுகள்
பங்குகள்/மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ள முதலீடுகளை விற்பதற்குப் பதிலாக அதின் மீது கடன் பெறலாம்.
வைப்பு நிதி திட்டம்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து வருகிறீர்களா மூன்று வருடம் தொடர்ந்து முதலீடு செய்த பிறகு கடன் பெற இயலும்.
இதன் மூலம் வாங்கும் கடன் பெறக் குறிப்பிட சில காரணங்களுக்காக மட்டுமே பெற இயலும் என்ற விதிகள் உண்டு.
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்
இலவசமாக வருமான வரி தாக்கல்