பணவீக்கம் மற்றும் மெதுவான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து புதிய ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலின் முதல் நிதி கொள்கை கூட்டத்தில் 0.25 சதவீதம் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கிகள் கடஙள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. ஜனவரி 2015 முதல் ஆர்பிஐ 1.50 சதவீதம் வரை ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
ரெப்போ விகதம் என்பதே ஆர்பிஐ வங்கிகளுக்குக் கொடுக்கும் வட்டி விகிதமாகும். இது விகிதத்தை உயர்த்தும் போது, வங்கிக்கான பணத் தேவை அதிகரிக்கும் எனவே வட்டி விகிதம் உயரும்.
வீட்டுக் கடன் மீதான தாக்கம்
0.25 சதவீதம் வட்டி விகிதம் குறைந்து உள்ள நிலையில் இப்போது நீங்கள் வீட்டுக் கடனின் வட்டியாக 9.5 சதவீதம் செலுத்தி வந்தால் அது 9.25 சதவீதமாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
இதனால் 25 லட்சம் வீட்டுக் கடனாக பெற்று இருந்து 15 வருடக் கடன் அடைப்பதற்கான காலமாக தேர்வு செய்திருந்தால் ஒவ்வொரு மாதமும் 26,105 ரூபாய் தவணையாக செலுத்த வேண்டி வரும். இதுவே இப்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டால் உங்களுக்கு மாதம் 375 ரூபாய் சேமிக்க இயலும். இதுவே மொத்த கடனில் 67,645 ரூபாய் சேமிக்க இயலும்.
இதுவே 50 லட்சம் கடனாக பெற்று இருக்கும் போது மாதத் தவணையில் இருந்து 751 ரூபாய் மொத்தக் கடனில் 1,35,291 ரூபாயும், 75 லட்சம் கடனாக பெற்று இருந்தால் 1,128 ரூபாய் மாதத் தவணையிலும் மொத்த கடனில் இருந்து அதிகபட்சமாக 2,03,000 ரூபாய் சேமிக்க இயலும்.
மேலும் படிக்க: வீட்டுக் கடன் மீதான மிதவை வட்டி எப்படி, எப்பொழுது மாறும்?