புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகத்தில் உள்ள தட்டுப்பாட்டினால் மக்கள் அவதிப் படு வரும் நிலையில் டிசம்பர் 30 ஆம் தேதி வரை திருமணம் உள்ளவர்கள் 2.5 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
மின்னணு பண பரிமாற்றம்
இப்படிப் பட்ட சூழலில் முடிந்த வரை மின்னணு பண பரிமாற்ற முறை கடைப்பிடியுங்கள் என்று மத்திய வங்கி அறிவுறுத்திவருகிறது.
எனவே நாம் இங்குத் திருமணத்திற்காக பணம் எடுக்கும் போது உங்களுக்கு உள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பதை இங்குப் பார்ப்போம்.
2.5 லட்சம்
2016 டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடக்க இருக்கும் திருமணங்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை தங்களது வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு வங்கியில் கணக்கை வைத்துள்ளவர்கள் சரியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம்.
திருமணம் 2016 டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் நடக்க வேண்டும்.
யாரெல்லாம் பணத்தை எடுக்கலாம்
பணத்தை எடுக்கப் பெற்றோர் அல்லது திருமணம் செய்யக்கூடிய நபர்களாக மட்டுமே இருக்க வேண்டும்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
விண்ணப்பப் படிவம், அழைப்பிதழ், திருமண மண்டபம் போன்றவற்றிற்கு அளிக்கப்பட்ட முன்பணம் ரசீது, சமையல் காரர்களுக்கு அளிக்கப்பட்ட ரசீது போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் நீங்கள் பெறும் பணம் எருக்கெல்லாம் அளிக்கப்பட்டது, அவர்கள் கணக்கு விவரம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.