வசதியான அறை, ஆடம்பரமான பார், பணக்கார நூலகம் போன்று எல்லாம் ஒரு ரயில் பெட்டியில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கனவு காண்பது உண்டா..?
இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு. சொந்தமாக ஒரு ரயில் பெட்டியை வங்கி உங்கள் இஷ்டத்திற்கு மற்றிக் கொள்ளுங்கள்.
வட கிழக்கு ரயில்வேயில் இருந்து ஆறு மீட்டர்-கேஜ் ரயில்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிராட் கேஜ் பெட்டிகளை இணைப்பதற்கான பணிகளைத் துவங்கி உள்ளது.
இதனால் அந்தப் பெட்டிகள் அனைத்தும் விரைவில் ஏலத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நீங்களும் வாங்கலாம்
இந்த ஏலத்தில் சாதாரண மக்களும் பங்கேற்கலாம், ரயில் பெட்டிகளை ஏலத்தில் எடுக்கலாம்.
ஏலம் அனைவருக்கும் பொதுவானது என்று வட கிழக்கு ரயில்வேயின் பிராதான பொதுஜன தொடர்பு அதிகாரி சஞ்சய் யாதவ் கூறியுள்ளார். இதற்கான விளம்பரம் அடுத்த மாதம் வெளியிடப்படலாம் என்றும் கூறினார்.
ஏலத்திற்கு வரும் போது பெட்டி எப்படி இருக்கும்?
25 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் கைவிடப்படும்.
இந்தப் பெட்டிகள் முதலில் பட்டறைக்கு அனுப்பப்படும். பின்னர் அதில் உள்ள தேவையான பொருட்கள் அனைத்தும் எடுக்கப்பட்ட பின்னர் தேவை இல்லாதவை மட்டுமே விற்பனைக்கு வரும்.
இதை ஏலத்தில் பெறும் கைவிடப்பட்ட பொருட்களின் டீலர்கள் பெட்டிகளைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் செல்வர். தனிநபர்கள் விற்பனையாளர்களிடம் இருந்து வங்காலாம். பெட்டியின் விலை அதை உருவாக்கும் போது பயன்படுத்தப்பட்ட இரும்பை வைத்துக் கூறப்படும்.
பெரும்பாலான ரயில்கள் இப்போது பிராட் கேஜ் ரயில்களாக உள்ள நிலையில் பிற கோச்சுகளின் ஷெல்கள் விற்கப்படும். பெட்டியின் சக்கரம் போன்றவை ஏதும் வழங்கப்படாது.
விலை
ஒரு பெட்டியை வங்குவது அவ்வளவு எளிதல்ல, டன் கணக்கில் இரும்பு இருக்கும். ஒரு ரயில் பெட்டியின் எடை 7 டன் வரை இருக்கும்.
30 வருடங்களுக்குப் பிறகு
கடைசியாக மீட்டர்கேஜ் பெட்டிகள் 1.10,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
இது 30 வருடங்களுக்கு முன்பு விடப்பட்ட ஏலத்தில் பெறப்பட்ட தொகையாகும்.
இப்போது விலை அதிகமாக உள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.