மாத சம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.
வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்.
இந்தத் திட்டத்தில் மாத சம்பளம் வாங்குவோர் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறலாம். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.
தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கும் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்றே 10,000 ரூபாய்க்கும் அதிகமான லாபத்திற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
எனவே நாம் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க கூடிய ஐந்து சிறந்த வங்கிகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
ஆக்ஸிஸ் வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஆக்ஸிஸ் வங்கியில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.
மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 8.25 சதவீதம் முதல் 8.40 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது மாதத் தவணையை காலதாமதமாகச் செலுத்தினால் 1000 ரூபாய்க்கு 10 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி
இந்திய பன்னாட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கியிலும் ஆக்ஸிஸ் வங்கியைப் போன்று 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்தக் கால அளவு 6 மாதத்தில் இருந்து 3 பெருக்கல் எண்களாக உங்கள் முதலீட்டுக் கால அளவைத் தேர்வு செய்ய இயலும்.
இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 7.75 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும். அதே நேரம் மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படும். முதலீடு செய்யும் போது மாதத் தவணையை காலதாமதமாக செலுத்தினால் 1000 ரூபாய்க்கு 12 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கியில் ஐசிஐசிஐ வங்கியைப் போன்றே 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்தக் கால அளவு 6 மாதத்தில் இருந்து 3 பெருக்கல் எண்களாக உங்கள் முதலீட்டுக் கால அளவைத் தேர்வு செய்ய இயலும்.
இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 8 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும். அதே நேரம் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டி அளிக்கப்படும். முதலீடு செய்யும் போது மாதத் தவணையை செலுத்த காலதாமதமாகச் செலுத்தினால் 30/360 என்ற நாள் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும்.
கோடாக் மகேந்திரா வங்கி
கோடாக் மகேந்திரா வங்கியில் குறைந்தது 6 வருடம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 8.50 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும். முதலீடு செய்யும் போது மாதத் தவணையை செலுத்த காலதாமதமாகச் செலுத்தினால் தவணையில் இருந்து 2 சதவீதத்தை அபராதம் செலுத்த வேண்டும்.
சிண்டிகேட் வங்கி
இந்தியாவின் பழமை வாய்ந்த வணிக வங்கிகளில் ஒன்று சிண்டிகேட் வங்கி. இங்குத் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். அதே நேரம் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டி அளிக்கப்படும்.
முதலீடு செய்யும் போது மாதத் தவணையை செலுத்த காலதாமதமாகச் செலுத்தினால் முதிர்வு காலத்தின் போது அல்லது நிரந்தரமாகத் திட்டத்தை மூடும் போது முதலீட்டாளருக்குக் கிடைத்துள்ள வட்டியை பொருத்து அபராதம் விதிக்கப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications