வரி சேமிக்கும் வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால் இதையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
வருமான வரி சட்டத்தின் படி பிர்வி 80 சி-ன் கீழ் வரி சேமிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குப் பெறலாம்.
இப்படி வரி சேமிக்கும் வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால் இதையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
யாரெல்லாம் முதலீடு செய்ய இயலும்...?
தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் மட்டும் வரி சேமிக்க கூடிய வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய இயலும்.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை எவ்வளவு..?
நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒவ்வொரு வங்கிகளிலும் குறைந்தபட்ச தொகையில் மாற்றம் உண்டு.
வைப்புக் காலம்
இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும் போது குறைந்தது 5 வருடங்களுக்கு முன்பு பணத்தை எடுக்கக் கூடாது. மேலும் இந்த வைப்பு நிதி திட்டங்கள் மூலம் கடன் ஏதும் பெற இயலாது.
எங்கு முதலீடு செய்ய வேண்டும்
கூட்டுறவு அல்லது ரூரல் வங்கிகளைத் தவிர்த்து பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் வைப்பு நிதி திட்ட கணக்குகளில் முதலீடு செய்யலாம்.
தபால் நிலையம்
வருமான வரி சட்டப் பிரிவு 80-சி இன் கீழ் தபால் நிலையத்தில் உள்ள 5 வருட கால வைப்பு நிதி திட்டங்களிலும் வரி விலக்கு பெற இயலும்.
தபால் நிலையத்தில் உள்ள வைப்பு நிதி திட்ட முதலீடு கணக்குகளை ஒரு கிளையில் இருந்து பிற கிளைக்கு எளிதாக மாற்ற முடியும்.
நன்மை
ஒருவரால் தனிநபர் அல்லது இணை கணக்காக வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் முதல் நபருக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும்.
வைப்பு நிதி திட்டங்கள் மூலம் பெறும் வட்டி லாபத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டி வரும். டிடிஎஸ் ஏற்றுக்கொள்ளப்படும்.
வட்டி விகிதம்
பல வங்கிகள் வைப்பு நிதி திட்டங்களுக்கு சிறிய வட்டி விகித மாற்றங்களுடன் திட்டங்களை அளிக்கின்றது. மேலும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு அதிக வட்டி விகிதமும் அளிக்கின்றன.
பணிநியமன
நிரந்தர வைப்பு நிதி திட்ட கணக்குகளில் பணிநியமன வசதியான நாமினி சேவையும் உண்டு.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications