இன்று பலரும் பங்குச்சந்தை முதலீட்டில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இதுகுறித்துத் தெரிந்தவர்கள் நேரடியாகவும், முழுமையான விபரம் தெரியாதவர்கள் மியூச்சுவல் பண்ட், எஸ்ஐபி எனப் பல வழிகளில் முதலீடு செய்து வருமானத்தை ஈட்டி வருகிறார்கள்
இப்படிப் பங்கு மூலதனத்தின் மீது கிடைக்கும் வருவாய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தந்திரங்கள்
இலாபத்தை மதிப்பிடுகிறது
பங்கு மூலதனத்தின் மீது கிடைக்கும் வருவாயானது (ROE) இலாபத்தை மதிப்பிடுகிறது. அதாவது, ஒரு நிறுவனம் அதன் பங்குதாரர்கள் முதலீடு செய்த பணத்தின் மீது எவ்வளவு இலாபத்தை உருவாக்கியுள்ளது என்பதை மதிப்பிடுகிறது.
சதவிகிதமாக வெளிப்படுத்தப்படுகிறது
பங்கு மூலதனத்தின் மீது கிடைக்கும் வருவாயானது பங்குதாரரின் பங்குகளை வரி கழிக்கப்பட்ட பிறகு வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இது சதவிகிதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது.
நிறுவனத்தின் செயல்திறனை மதிப்பிடுகிறது.
மேலும் பங்கு மூலதன வருவாயானது கொடுக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகம் எப்படிப் பங்குதாரர்களின் மூலதனத்தைத் திறம்படப் பயன்படுத்துகிறது என்பதைக் குறிப்பிட்டு அந்த நிறுவனத்தின் செயல்திறனை அளவிடுகிறது.
பங்கு மூலதன வருவாயில் ஏற்றம்
கூடுதல் மூலதனம் தேவைப்படாமலேயே லாபத்தை உருவாக்கும் திறனை நிறுவனம் அதிகரித்துள்ளது என்பதைப் பங்கு மூலதன வருவாயின் உயர்வு சுட்டிக்காட்டுகிறது.
செயற்கையான அதிகரிப்பு
சொத்து மதிப்பைக் குறைத்து எழுதுதல், பங்குகளைத் திரும்ப வாங்குதல் மற்றும் உயர் நிலை கடன்கள் ஆகியவை பங்குதாரர்களின் பங்குகளின் மதிப்பைக் குறைக்கிறது. அது பங்கு மூலதனத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு செயற்கையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.