பங்குச் சந்தையில் எந்த நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் நல்ல லாபம் அளிக்கின்றனவோ அதுவெல்லாம் பல மடங்கு லாபம் அளிக்கும் பங்குகள் ஆகும்.
இந்த நிறுவன பங்குகளில் நீண்ட கால முதலீடுகளைச் செய்ய வேண்டும். குறைந்த காலத்தில், ஒரே இரவில் எல்லாம் நல்ல லாபம் அளிக்காது.
எனவே அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை எந்தப் பங்குகள் எல்லாம் நல்ல லாபத்தினை அளிக்கும் என்ற விவரங்களை இங்குப் பார்ப்போம்.
வெல்ஸ்பன் இந்தியா
வெல்ஸ்பன் இந்தியா உலகின் மிகப்பெரிய வீட்டிற்குத் தேவையான ஜவுளி பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. குளியல், தரை, படுக்கை விரிப்புகள் போன்றவற்றைத் தாயார் செய்வதில் வலுவான நிறுவனமாக உள்ளது.
இந்தியாவின் டாப் 30 ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் தொடர்ந்து தங்களது 17 முக்கியத் தயாரிப்புகளை விநியோகம் செய்து வருகின்றது. அமெரிக்காவில் படுக்கை விரிப்புகள் விற்பனை சந்தை மதிப்பில் பதிக்கும் மேலாக இந்திய நிறுவனங்களிடம் உள்ளன.
பருத்தி உற்பத்தியில் உலகின் இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ள இந்தியாவால் வெல்ஸ்பன் போன்ற நிறுவனங்கள் நல்ல பயன் அடைந்துள்ளன. வெல்ஸ்பன் நிறுவனத்திடம் அமெரிக்கத் துண்டு சந்தை மதிப்பில் 21.7 சதவீதமும், தரை விரிப்புகள் சந்தையில் 11.7 சதவீத சந்தையும் உள்ளது.
நூற்பு, நெசவு மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்த ஒருங்கிணைப்புடன் மிகவும் குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து அளிக்கின்றது. இந்த நிறுவனத்துடன் ஒரு கைதேர்ந்த மின் உற்பத்தி அலகும் உள்ளது.
பங்குச் சந்தையில் வெல்ஸ்பன் இந்தியா
மேலே வெல்ஸ்பன் இந்தியா நிறுவனத்தினைப் பற்றி விளக்கமாகப் பார்த்து இருந்தோம். இப்போது பங்கு சந்தையில் வெல்ஸ்பன் இந்தியா எந்த நிலையில் உள்ளது என்பதை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
2017-ம் ஆண்டு ஜூன் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. நிகரக் கடன் மதிப்பினை 1.3 இல் இருந்து 1.2 ஆக ஈவிட்டி மதிப்பிற்குக் குறைத்துள்ளது. மேலும் ஜூன் காலாண்டில் வெஸ்பன் நிறுவனம் 12.43 லோடி நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 100 ரூபாய்க்கும் குறைவாக 77 ரூபாய்கள் உள்ளது. இப்போது முதலீடு செய்தால் பிற்காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.
சென்னை பெட்ரோலியம்
கச்சா எண்ணெய் விலை குறையும் போது சென்னை பெட்ரோலியம் பங்குகள் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும். சென்னை பெட்ரோலியம் நிறுவனம் கச்சா எண்ணெய்யினைச் சுத்தம் செய்து பெட்ரோலியம் பொருட்களாக மாற்றுகின்றது. 2016-2017 நிதி ஆண்டில் ஒவ்வொரு பங்குகள் மீதும் 70 ரூபாய் வரை சென்னை பெட்ரோலியம் பங்குகள் லாபம் அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை எப்போது வேண்டும் என்றாலும் உயரும் அபாயம் உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகள் 450 ரூபாயாக உள்ளது. இதுவே 350 ரூபாயாக இருக்கும் போது வாங்குவது நல்லது. 6 முதல் 7 சதவீதம் வரை டிவிடண்ட் லாபத்தினை இந்தப் பங்குகள் அளிக்கின்றன.
விஎஸ்டி டில்லர்கள் மற்றும் டிராக்டர்கள்
2017-ம் ஆண்டு முதல் நல்ல லாபம் அளிக்கும் பட்டியலில் முதன் முதலாக இந்தப் பங்குகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனம் பவர் டில்லர் மற்றும் டிரார்க்ட்டர்களை உற்பத்தி செய்கின்றது. சென்ற ஆண்டு மத்திய அரசு விவச்சியிகள் வருவாயினை இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயன் பெறும் போது விஎஸ்டி டில்லர்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற நிறுவனங்கள் பயன்பெறும். 8 கோடி முதலீட்டில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கடன் வாங்காத ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்திற்குச் சிறந்த டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர் நெட்வோர்க் மற்றும் தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதியும் செய்து வருகின்றது.
பங்குச் சந்தையில் விஎஸ்டி டில்லர்கள் மற்றும் டிராக்டர்கள்
2017 மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 17.49 கோடி ரூபாய் நிகர லாபத்தினை இந்தப் பெற்றதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு பங்கின் மீது சென்ற நிதி ஆண்டில் 83 ரூபாய் வரை லாபத்தினை இந்தப் பங்குகள் அளித்துள்ளன. ஒரு வௌடத்தில் 18 மடங்கு வரை வருவாயினைக் கடன் இல்லாமல் அதிகரித்துள்ளது. எனவே இந்தப் பங்குகளில் முதலீடு செய்வது நீண்ட காலத்தில் நல்ல பயன் அளிக்கும்.
டிவி டூடே
டிவி டூடே நெட்வோர்க்கின் கீழ் ஆஜ் தக் மற்றும் ஹெட்லைன்ஸ் டூடே உள்ளிட்ட சேனல்கள் இயங்கி வருகின்றன. இரண்டு டிவி சேனல்களும் நல்ல வளர்ச்சியினை அடைந்து வருகின்றன. மீடியா நிறுவனங்களைப் பொருத்த வரை பங்குகளுக்கு அதிக டிஸ்கவுண்ட்டுகள் அளிக்கும் நிறுவனமாக இது உள்ளது. இரண்டு வருடம் வரை இந்தப் பங்குகளை வைத்து இருந்தால் நல்ல லாபத்தினைப் பெறலாம்.
பங்குச் சந்தையில் டிவி டூடே
2017 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் வருவாயில் நல்ல வளர்ச்சியினைப் பெற்று வருகின்றது. ஒவ்வொரு பங்குகளுக்குக் குறைந்தது 16.60 ரூபாய் வரை லாபம் அளித்துள்ளது. 2018-2019 நிதி ஆண்டில் ஒவ்வொரு பங்குக்கும் 20 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்று தரவுகள் கூறுகின்றன.
2019-ம் ஆண்டுத் தேர்தல் வரும் நேரத்தில் பங்குகளின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. தற்போது இந்தப் பங்குகளின் விலை 257 ரூபாயாக உள்ளது. 400 ரூபாய் வரை இதன் பங்குகள் விலை உயர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. நல்ல டிவிடண்ட் வருவாயினையும் இந்தப் பங்குகள் அளிக்கின்றன. இரண்டு வருடம் வரை முதலீடுகளைத் தொடர்வதற்கு இந்தப் பங்குகள் சிறந்ததாக இருக்கும்.
வரி
பங்குச் சந்தை மூலம் பெறப்படும் வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். இதுவே முதலீடு செய்த பங்குகளில் இருந்து 1 வருடம் வரை வெளியேறாமல் இருந்தால் வரி செலுத்த தேவையில்லை. எனவே நீண்ட கால வளர்ச்சியினைத் தரும் பங்குகளில் பார்த்து முதலீடு செய்வது நல்லது. ஆனால் இதுபோன்ற பங்குகள் எத்தனை வருடங்கள் நல்ல லாபத்தினை அளிக்கும் என்று கூற முடியாது.
குறித்த உரிமைத்துறப்பு
கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.