சென்னை: ஐசிஐசிஐ வங்கி தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் உடன் இணைந்துள்ளது. இதன் மூலம் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பேடிஎம்-ஐ உபயோகித்தால் சிறப்புச் சலுகை கிடைக்கும்
என்ன சிறப்புச் சலுகை:
ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் மற்றும் பேடிஎம் வாடிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் ரூ.3000 முதல் ரூ.10000 வரை வாங்கும் பொருட்களுக்குத் தவணை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை வாடிக்கையாளரின் திறனை பொருத்து ரூ.20000 வரை அதிகரிக்கப்படும்.
வட்டி எப்படி?
இந்தத் தவணை தொகைக்கு 45 நாட்கள் வரை எந்தவித வட்டியும் இல்லை. அதற்குப் பின்னர் 3% வட்டி வசூல் செய்யப்படும்.
எதற்கெல்லாம் கடன் அளிக்கப்படும்.
இந்த லோன் வசதி பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமின்றிக் கடன் கட்டணத்தைச் செலுத்துவது, டிஜிட்டல் பைனான்ஸ் செலுத்துவது போன்றவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏன் இந்தச் சிறப்பு வசதி?
இந்த வசதி இருப்பினும், எங்கள் தேவைகளுக்கு நிதியளிப்பதைத் தவிர்ப்பது தோராயமாக 36% வட்டி வருடாந்தர அடிப்படையிலான வட்டிக்கு செலுத்தப்படாவிட்டால், அதன் விளைவாக ஆபத்து விளைவிக்கப்படக்கூடாது. மேலும், ஒருவரின் ஆன்லைன் கொள்முதலை அவர்களது தேவைகள் மற்றும் நிதி வரவு செலவுத் திட்டங்களுடன் ஓட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications