பேமன்ட்ஸ் வங்கிகள் (Payments Bank) என்னும் புது வகையான வங்கிகள் தொடங்குவதற்கு 2015 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி, கருத்துருக்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியது. பேமன்ட்ஸ் வங்கிகள் தொடங்க 11 நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தன. அதன்படி சில நிறுவனங்களின் பேமன்ட்ஸ் வங்கிகள் தற்போது இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள 5 பேமன்ட்ஸ் வங்கிகள் குறித்துப் பார்ப்போம்.
பேமன்ட்ஸ் வங்கிகள் என்றால் என்ன?
பேமன்ட்ஸ் வங்கிகளுக்கும் மற்ற வங்கிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. பேமன்ட்ஸ் வங்கிகள் மற்ற வணிக வங்கிகளைப் போல வாடிக்கையாளர்களுக்குக் கடன்களையோ கடன் அட்டைகளையோ (கிரடிட் கார்டு) வழங்காது. ஆனால், ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை ஆகியவற்றைப் பேமன்ட்ஸ் வங்கிகள் வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் இவ்வங்கியில் சேமிப்புப் கணக்குகளைத் தொடங்கலாம். தற்போது, வாடிக்கையாளர்கள் இவ்வங்கியில் அதிகபட்சமாக ஒரு இலட்ச ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக வைக்க முடியும். வருங்காலத்தில் இந்த உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படலாம். இந்தியாவில் செயல்படுகின்ற பேமன்ட்ஸ் வங்கிகளையும் அதன் சிறப்புக்களையும் பார்க்கலாம்.
ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பேமன்ட்ஸ் வங்கி என்னும் பெருமையை ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் இவ்வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்கிய நிலையில் தற்போது 5.5 சதவீத வட்டி மட்டுமே அளிக்கிறது. பெரிய மற்றும் சிறிய வணிக வங்கிகளோடு ஒப்பிடுகையில், ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் தான் சேமிப்புக் கணக்குகளுக்கான மிக அதிகமான வட்டி விகிதமாகக் கருதப்படுகிறது.
முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இவ்வங்கியில் பேப்பர்களுக்கு வேலையில்லை. மொபைல் செயலி வழியாக மட்டுமே இவ்வங்கிக் கணக்கை இயக்கமுடியும். ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இணையம் வழியாகப் பயன்படுத்த கூடிய மாஸ்டர் கார்டு வழங்கப்படுகிறது.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம் பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியைத் தொடங்கி வைத்தார். இவ்வங்கி, சேமிப்புக் கணக்குகளுக்கு 4% வட்டி வழங்குகின்றது. உடனடிப் பணப்பரிமாற்ற சேவை (IMPS), பணம் செலுத்தலுக்கான ஒருங்கிணைந்த இணைப்புநிலைச் சேவை (UPI), தேசிய மின் நிதிப் பரிமாற்றம் (NEFT) ஆகிய சேவைகளை இணையம் வழியாக இவ்வங்கி வழங்குகிறது. இச்சேவைககள் விரைவான பணப்பரிமாற்த்திற்கு உதவுகின்றன.
ஃபினோ பேமன்ட்ஸ் வங்கி (Fino Payments Bank)
ஃபினோ பேடெக் (Fino Paytech) நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது ஃபினோ பேமன்ட்ஸ் வங்கி. சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் வழங்குவது மட்டும் அல்லாமல், நடப்புக் கணக்கு மற்றும் சிறுஅளவிலான கடன் வழங்குதல் போன்ற வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கி வழங்குகின்றது. ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகிய இரண்டு மட்டும் இருந்தாலே போதும், இவ்வங்கியில் வணிகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக நடப்புக் கணக்குகளைத் தொடங்க முடியும். இவ்வங்கி சேமிப்புகளுக்கு 4% வட்டி வழங்குகின்றது.
இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி
இந்திய அஞ்சல் துறையால் தொடங்கப்பட்டுள்ள இவ்வங்கி, இன்னும் தன்னுடைய சேவையினை முழுமையாக வழங்கவில்லை. சோதனை முயற்சியாக, உத்தரகாண்டில் உள்ள ராய்ப்பூர், ஜார்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய நகரங்களில் மட்டும் தற்போது செயல்படுகிறது. விரைவில் நாடு முழுவதும், இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கியின் கிளைகளை எதிர்பார்க்கலாம். இவ்வங்கி சேமிப்புகளுக்கு 5.5% வட்டியை வழங்குகிறது. இவ்வங்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு டெபிட் கார்டினை இலவசமாக வழங்குகிறது. கார்டு வழங்கப்பட்ட இரண்டாம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 100 ரூபாய் பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கிறது.
ஜியோ பேமன்ட்ஸ் வங்கி
பேமன்ட்ஸ் வங்கிகளின் வரிசையில் சமீபத்திய புது வரவாக ஜியோ பேமண்ட்ஸ் வங்கி தன்னுடைய சேவையைத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் மூலமாக இவ்வங்கிகள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய ஸ்டேட் வங்கியுடன் சேர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்தச் சேவையை வழங்குகிறது. சேமிப்புகள் மற்றும் வைப்புத் தொகைகளுக்கான வட்டிவிகிதம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் யெஸ் வங்கி (Yes Bank) ஆகியவற்றில் உயர் பதவி வகித்த ஸ்ரீகிருஷ்ணன் என்பவர் ஜியோ பேமன்ட்ஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications