பென்ஷன் திட்டங்களில் எல்ஐசி ஜீவன் சாந்தி மற்றும் என்பிஎஸ் உள்ளிட்டவற்றைப் பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்தால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியும். இரண்டு திட்டங்களும் வெவ்வேறு வகையில் முதலீட்டாளர்கள் பயன் அளிக்கிறது.
ஆனால் இங்கு மாதம் 50,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி என்று மட்டும் விளக்கமாகப் பார்க்கலாம்.
எல்ஐசி
எல்ஐசி ஜிவன் சாந்தி திட்டத்தில் ஒரே அடியாக அதாவது ஒற்றைப் பிரீமியாக ஒரு பெறும் தொகையினை முதலீடு செய்து அதனைப் பென்ஷனாகப் பெறுவது ஆகும். இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை திரும்ப வழங்கப்படும்.
உடனடியாக மாதம் 50,000 ரூபாய் பென்ஷன்
ஜீவன் சாந்தி திட்டம் கீழ் 60 வயதில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் இந்தத் திட்டத்தில் 70 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதில் பென்ஷன் வேண்டும் என்றால் 80 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 40 வயது என்றால் 86 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
இந்தத் திட்டம் கீழ் முதலீடு செய்யக் குறைந்தபட்ச வயது 30 ஆகும்.
20 வருடங்களுக்குப் பிறகு பென்ஷன் வேண்டும் என்றால்
இதே எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீட்டினை தொடங்கிய 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் 50,000 ரூபாய் பென்சன் வேண்டும் என்றால் 30 வயது ஆகும் போது 29 லட்சம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 50 வயதாகிறது என்றால் 33 லடம் ரூபாயினை முதலீடு செய்ய வேண்டும்.
எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம் கீழ் அதிகத் தொகையினை ஒற்றைப் பிரீமியமாக முதலீடு செய்யும் போது எளிமையாகப் பென்ஷன் பெற முடியும் என்ற நிலையில் அடுத்து என்பிஎஸ்ச் கீழ் முதலீடு செய்வது பென்ஷன் பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
என்பிஎஸ்
என்பிஎஸ் திட்டத்தில் 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். தற்போது உங்கள் வயது 25 என்றால் மாதம் 4,150 ரூபாய் முதலீடு செய்யும் போது 60 வயதாகும் போது மாதம் 50,000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும்.