மும்பை: ஜூலை 05, 2019, வெள்ளிக்கிழமை அன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த 10,000 ரூபாய்க்கு மேல் வரி பாக்கி என்றால் வழக்கு என்கிற விஷயம்
இனி தனி ஒருவர் (Individual), ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டிய பாக்கி இருக்கிறது, வருமான வரி தாக்கல் செய்யவில்லை போன்ற பிரச்னைகள் இருக்கிறது என்றால்.. அவர் மீது வருமான வரித் துறை, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வரியை வசூலிக்கலாம்.

இதுவே ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி (Income Tax) 10,000 ரூபாய்க்கு கீழ் இருக்கிறது என்றால், அவர் மீது வருமான வரித் துறை எந்த ஒரு வழக்கும் போடாது என பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இந்த 2019 - 20 நிதி ஆண்டு பட்ஜெட்டுக்கு முன் ஆண்டுக்கு 3,000 ரூபாய்க்கு மேல் வருமான வரி பாக்கி செலுத்தாது இருந்தால் அவர்கள் மீது வழக்கு போட்டு வசூலிக்க இந்திய வருமான வரிச் சட்டம் 276CC வழி வகை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக் குறித்து வரி அனலிஸ்டுகள் கூறும் போது "10,000 ரூபாய்க்கு மேல் வருமான வரி (Income Tax) பாக்கி வைத்திருப்பவர்கள் மீது எல்லாம் வழக்கு தொடுப்பேன் என்பது அத்தனை சரியாகப் படவில்லை. வழக்கு தொடுத்து ஒருவரிடம் வரி வசூலிப்பது என்பது ஒரு மிகப் பெரிய வேலை. இத்தனை கடுமையான நடவடிக்கைகளை வெறும் 10,000 ரூபாய் வரிக்கு சிரமப்பட்டு எடுப்பதற்கு பதிலாக ஒரு 5 லட்சம் ரூபாயை வரம்பாக வைத்திருக்களாம்" என்கிறார்கள்.
அதோடு "நிதி அமைச்சகம் இனி Tax Deducted at source எனப்படும் வருவாய் வரும் இடத்திலேயே வரி பிடித்தம் செய்வது மற்றும் Adance Tax எனப்படும் முன் கூட்டியே செலுத்திய வரிகள் போன்றவைகளை மட்டுமே வரிக் கணக்கில் வரவு வைத்தார்கள். இனி நாமே முன் கூட்டி கணக்கிட்டுச் செலுத்தும் Self Assessment Tax-களையும் வரிக் கணக்கில் வரவு வைப்போம்" எனச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நடவடிக்கையை வரி அனலிஸ்டுகள் வரவேற்று இருக்கிறார்கள். இந்திய வருமான வரிச் சட்டப் பிரிவு 276CC-ஐ ஆங்கிலத்தில் படிக்க கிழே கொடுத்திருக்கும் லிங்கைச் சொடுக்குங்கள். லிங்க்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications