டெல்லி : கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் வரி மோசடி செய்தவர்கள் மூலம் சுமார் 38,000 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக வரி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆமாங்க.. கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மட்டும் 37,946 கோடி ரூபாய் வரி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 6520 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர போலி இன்வாய்ஸ் பில்கள் மூலம், கிட்டதட்ட 11,251 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 2,805 கோடி ரூபாயாகவும் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.
அதிலும் ஜி.எஸ்.டி அமலப்டுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 5 வழக்குகள் மூலம் 12.67 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் இரு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் மட்டும் 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள் மூலம், சுமார் ரூ.11,251.23 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே நடப்பு நிதியாண்டில் ஏபரம் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 666 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 2,804 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 41 பேர் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பின்னர் வரி மோசடி வழக்குகள், கடந்த 2017 - 2018 ஜூலை முத; மார்ச் வரையிலான காலத்தில் 1,216 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட 424 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
இந்த வகை மோசடிகளைக் குறைக்க அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்றும் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications