டெல்லி : கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் வரி மோசடி செய்தவர்கள் மூலம் சுமார் 38,000 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக வரி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆமாங்க.. கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மட்டும் 37,946 கோடி ரூபாய் வரி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 6520 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர போலி இன்வாய்ஸ் பில்கள் மூலம், கிட்டதட்ட 11,251 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 2,805 கோடி ரூபாயாகவும் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.
அதிலும் ஜி.எஸ்.டி அமலப்டுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 5 வழக்குகள் மூலம் 12.67 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் இரு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் மட்டும் 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள் மூலம், சுமார் ரூ.11,251.23 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே நடப்பு நிதியாண்டில் ஏபரம் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 666 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 2,804 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 41 பேர் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பின்னர் வரி மோசடி வழக்குகள், கடந்த 2017 - 2018 ஜூலை முத; மார்ச் வரையிலான காலத்தில் 1,216 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட 424 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
இந்த வகை மோசடிகளைக் குறைக்க அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்றும் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications