ஆங்காங்க்கே மக்கள் கொத்து கொத்தாய் செத்து மடியும் இந்த நேரத்தில், அதிலும் உலகமே முடங்கிக் கிடக்கும் இந்த நிலையில் முதலீடா? என்று நினைக்க வேண்டும்.
எப்படி நேரத்திலும் லாபம் கொடுக்கும் சிறந்த முதலீடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக அவற்றை பற்றி அலசி ஆராய்ந்து பின் அதில் முதலீடு செய்ய வேண்டும்.
சரி வாருங்கள் சில பாதுகாப்பான முதலீடுகள் பற்றித் பார்க்கலாம். மேலும் அது எப்படி இந்த நேரத்தில் சிறந்ததாக இருக்க முடியும் என்பதையும் பார்க்கலாம்.
சிறந்த லாபம்
முதலாவதாக நமது பட்டியலில் இருப்பது கோல்டு இடிஎஃப் (Gold ETFs). கடந்த ஆண்டு இந்த கோல்டு இடிஎஃப் 18.4% லாபத்தினைக் கொடுத்துள்ளது எனலாம். அதிலும் கடந்த 2010 முதல் இது சிறப்பான லாபத்தினை கொடுத்து வருகிறது. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் கடந்த மார்ச் வரையில் 7% லாபம் கொடுத்துள்ளது. இது தங்கத்துடன் நேரடி தொடர்புடன் உள்ளதால், இது முதலீட்டாளர்களுக்கு சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பயன்படுகிறது.
ஏன் தங்கத்தினை தேர்வு செய்ய வேண்டும்?
தற்போது உலகளவில் நிலவி வரும் நெருக்கடி காலத்தில், தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இது லாபகரமான முதலீடாக மட்டும் அல்லாமல், பாதுகாப்பான முதலீடாகவும் உள்ளது. இது மட்டும் அல்ல குறைந்த வட்டி விகிதங்கள், தங்கத்தில் முதலீடி செய்ய வழிவகுக்கின்றன.
பிசிகல் தங்கத்தினை விட கோல்டு இடிஎஃப் சிறந்தது ஏன்?
பிசிகல் தங்கத்தினை விட கோல்டு இடிஎஃப் சிறந்தது. ஏனெனில் இது என்எஸ்இ சந்தையில் புழங்குவதால், சந்தையில் வாங்கலாம், விற்கலாம். பிசிகல் கோல்டுடன் ஒப்பிடும்போது செலவுகள் குறைவும். ஏனெனில் கோல்டு இடிஎஃப் மின்னணு வடிவில் நம்மிடம் இருக்கும். ஆக எல்லாவிதத்திலும் பிசிகல் தங்கத்தினை விட சிறந்தது. எல்லாவற்றையும் விட நல்ல வருமானத்தினை கொடுக்கக் கூடிய ஒரு திட்டம் இது.
பாரத் பாண்ட் இடிஎஃப்
மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் பாண்டுகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் தான் இந்த பாரத் பாண்ட் இ.டி.எஃப். இதன் முதிரிவு காலம் முதிர்வு காலம் மூன்று மற்றும் 10 ஆண்டுகள் ஆகும். இதில் குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். இந்த பத்திரங்கள் வரி இல்லா பத்திரங்களை விட சிறந்த முதலீடுகளாக கூறப்படுகின்றன.
அரசு பத்திரங்கள் (Govrment of india bonds)
தற்போதைய கொந்தளிப்பான நேரங்களில் இது ஒரு சிறந்த முதலீடாகும். ஏனெனில் சில்லறை முதலீட்டாளர்கள் பாதுகாப்பாகவும் வேகமாகவும் லாபத்தினை ஈட்ட இது சிறந்த வழியாகும். மேலும் நீண்ட காலத்தில் அரசு பத்திர திட்டங்கள் நல்ல லாபத்தினை அளிக்கும். இதனையும் நாம் தேசிய பங்கு சந்தை மூலம் பெற முடியும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications