ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது உற்சாகமானதாகவும்.. அதே நேரத்தில் சவாலானதாகவும் இருக்கும் ஒரு விஷயம். ஏனெனில் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் சில நேரங்களில் தவறான இடங்களை தேர்வு செய்து வாங்கிவிடலாம். இதன் காரணமாக தான் நீங்கள் வாங்க இருக்கும் நிலம் அல்லது வீட்டைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு இறங்க வேண்டும். நிலத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
இடம்: நிலத்தில் முதலீடு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கூறுகளில் ஒன்று இடம். எந்த சொத்திலும் முதலீடு செய்வதற்கு முன், அது அமைந்துள்ள பகுதியை முழுமையாக ஆராயுங்கள். பள்ளிகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் போன்ற வசதிகளுக்கு அருகாமையில் உள்ள பகுதி, குடியேறத் தேவையான சூழல் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். 2023-ஆம் ஆண்டின் 4-வது காலாண்டில், அகில இந்திய வீட்டு விலைக் குறியீடு அதன் முந்தைய ஆண்டை விட 3.81% அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பட்ஜெட்டை தீர்மானியுங்கள்: இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு மாறுபடும். எனவே வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள விலையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு ஏற்ற விலையில் சொத்தை தேர்வு செய்யலாம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷயம் விலை மலிவாக இருக்கிறது என்பதற்காக எந்த பிரயோஜனமும் இல்லாத இடத்தை வாங்குவது உங்களுக்கு லாபகரமானதாக இருக்காது.
வணிக சொத்து: சிலர் தங்களுக்கு பிற சொத்துக்கள் அல்லது வீடு இருப்பதன் காரணமாக வாடகை வருமானம் பெற வேண்டி சில சொத்துக்களில் முதலீடு செய்யலாம். அப்படி வாங்கும் நபர் எனில் கண்டிப்பாக வாடகைதாரர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். உதாரணமாக பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் இருக்கும் இடத்தை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் வாங்கும் சொத்துக்கு கணிசமான லாபத்தைப் பெற முடியும்.
சொத்தை விற்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்: எப்படி ஒரு இடத்தை வாங்கும் போது அது இருக்கும் இடம் மற்றும் பிற வசதிகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டுமோ? அதேபோல ஒரு சொத்தை விற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் சொத்தை வாங்கி குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருந்து விட்டு தேவைப்பட்டால் விற்க நினைத்தால் எந்தவித இடையூறும் இல்லாமல் விற்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.
ஆவணங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள்: தற்போது மோசடிக்காரர்களின் அதிகரிப்பு சர்வ சாதாரணமாகிவிட்டது. யாரோ ஒருவருடைய சொத்தை தங்களுடையது போல காண்பித்துக் கொண்டு ஏமாற்றி விற்றுவிடும் கதையும் நடந்து வருகிறது. எனவே எந்த ஒரு சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அனைத்து ஆவணங்களும் சரியானதாக இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் அவற்றில் முதலீடு செய்வதற்கு பதிலாக வேறு இடத்தை பார்ப்பதே சிறந்தது.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications