டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதால், மோசடிகள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பலர் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பணத்தை இழக்கின்றனர். அதிலும் குறிப்பாக கிரெடிட் கார்டு மோசடிகள் நம் நாட்டில் நிறைய நடக்கிறது. நாளொன்றுக்கு குறைந்தது 2 செய்திகளாவது பண இழப்பு தொடர்பாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் இடையே விழிப்புணர்ச்சி இல்லாததுதான். இந்தப் பதிவில் கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான 5 டிப்ஸ்களைப் பார்ப்போம்.
தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்கவும்: இது பொதுவான விஷயம்தான். உங்களுடைய பின் நம்பர், CVV கோடு மற்றும் தனிப்பட்ட விவரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் யாரிடமும் வழங்காமல் இருங்கள். தொலைபேசியில் இது போன்ற தகவல்களைக் கேட்டு உங்களுக்கு அழைப்பு வந்தால் அது மோசடிக்காரர்களின் யுக்தியாக இருக்கலாம். ஏனெனில் எந்த ஒரு வங்கியோ அல்லது கார்டு வழங்குனரோ உங்களிடம் தனிப்பட்ட தகவல்களைக் கேட்க மாட்டார்கள்.

உங்கள் கணக்கின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்கவும்: உங்கள் கணக்கின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் அல்லது பிற கட்டணங்கள் எதுவும் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக ரசீதுகளுடனே ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய பரிவர்த்தனையின் விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்தவும்: நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது "HTTPS" கொண்ட பாதுகாப்பான இணையதளங்களில் மட்டுமே ஷாப்பிங் செய்ய வேண்டும். இதே போல தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்து வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை கொடுக்கக் கூடாது. இதன் மூலம் உங்களுடைய விவரங்களை தெரிந்து கொண்டு உங்களுக்கே தெரியாமல் அவற்றைப் பயன்படுத்தி அதில் இருக்கும் பணத்தை எடுத்து விடுவார்கள்.
நோட்டிபிகேஷன்-ஐ ஆன் செய்து வைத்திருங்கள்: எந்த ஒரு கிரெடிட் கார்டு பரிவர்த்தனை நடந்தாலும் அதன் விவரங்கள் குறித்து உங்கள் வங்கியில் இருந்து மொபைல் நம்பருக்கு தெரிவிக்கும் வகையில் நோட்டிபிகேஷன்-ஐ ஆன் செய்து வைத்திருங்கள். இது வேறு ஏதேனும் பரிவர்த்தனை நடந்தால் உங்களுக்கு தெரியப்படுத்தி விடும்.
உங்களுக்கு கிரெடிட் கார்டை பாதுகாப்பாக வைத்திருங்கள்: உங்கள் கிரெடிட் கார்டைப் பொதுவில் பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்தவும். எல்லா நேரங்களிலும் பிறர் கண்ணுக்கு தெரியும்படி வைக்க வேண்டாம். அதேபோல வங்கி அறிக்கைகள், தனிப்பட்ட தகவல்களை தூக்கி எறிவதற்கு முன்பு அவற்றை பிறருக்குத் தெரியாத வண்ணம் அகற்றவும்.
கிரெடிட் கார்டு அறிக்கையை தவறாமல் சரி பார்க்கவும்: உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையை தவறாமல் சரி பார்ப்பதன் மூலம் தேவையற்ற பரிவர்த்தனை நடந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படி நடந்திருந்தால் அவற்றுக்கு நடவடிக்கை எடுக்கலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications