சென்னை: உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிக்கவும் அபராதங்களைத் தவிர்க்கவும் உதவும். எனவே உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதுகாப்பாக வைத்திருக்க குறிப்பிடப்பட்ட தேதிக்குள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்தி விட வேண்டும். அதற்கான சில வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பெரும்பாலானோர் தங்களின் கிரெடிட் கார்ட் பில்களை குறிப்பிடப்பட்ட தேதிக்குள் அல்லது அதற்கு முன்னரே செலுத்தி விடுகின்றனர். ஆனால் பலருக்கு அதன் பின் விளைவுகள் பற்றித் தெரியாமல் இருப்பதால் காலக்கெடுவை மீறி கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளை செலுத்தி வருகின்றனர்.

இது போன்ற செயல்பாடுகள் உங்களின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். மேலும் வரும் காலங்களில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், கடன் பெற முடியாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்தப் பதிவில் உங்களது கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பற்றிப் பார்ப்போம்
கிரெடிட் கார்டு பில் என்பது நீங்கள் செலவு செய்த பணப்பரிவர்த்தனைக்கான ஆவணம் ஆகும். இதில் நீங்கள் எவ்வளவு தொகை செலவு செய்து உள்ளீர்கள் என்பது போன்ற விவரங்கள் இருக்கும். இதனை கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்கள் உருவாக்கும். இதனை ஈமெயில் மூலம் உங்களுக்கு அனுப்பும்.
மேலும் நீங்கள் செலவு செய்த தொகையை உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் வசூலிக்கும். அதாவது நீங்கள் கிரெடிட் கார்டு பில்களை பெற்ற 20 முதல் 25 தேதிகளில், உங்களிடம் இந்த கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இந்த தேதியில் இருந்து காலக்கெடுவை மீறி கிரேடிட் கார்டு பில்களை செலுத்தும் போது உங்களுக்கான தொகையுடன் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
உங்கள் கிரெடிட் கார்ட் பில்களை காலக்கெடுவுக்கு முன்பே செலுத்துவது நல்லது. மேலும், செலுத்திய தொகை, உங்கள் கணக்கில் சரியான நேரத்தில் செலுத்தப்பட்டதா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் சில நேரங்களில் பிராசசிங் செய்யப்படுவதற்கு நேரம் எடுக்கலாம். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு உங்களது கிரெடிட் கார்டு பில்களை முன்கூட்டியே செலுத்துவது உத்தமமாகும்.
கிரெடிட் கார்டு பில்களைச் செலுத்தும் காலக்கெடுவைத் தவறவிட்டால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கலாம். இது பிற்காலத்தில் நீங்கள் பெறக்கூடிய கடன் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பளிக்கும். உங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை உரிய தேதிக்கு முன் செலுத்துவது ஒரு நல்ல நடைமுறையாகும்.
இந்த கிரெடிட் கார்ட் பில்கள் பொதுவாக 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை தயாரிக்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப இந்த காலக்கெடு அமைக்கப்படும். தாமத கட்டணங்களைத் தவிர்ப்பது உங்களது கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க உதவும்.
நீங்கள் எவ்வளவு கடன் பட்டிருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் அறிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இது தேவையற்ற உங்களின் செலவுகளை மதிப்பாய்வு செய்வதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
எந்த கால கெடுவுக்குள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக ரிமைண்டர்களை வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு மெசேஜ்கள் வரும் இது போன்ற நடைமுறைகளை மேற்கொள்வதால் அபராத கட்டணங்கள் ஏதும் இன்றி, நீங்கள் சரிவர கிரெடிட் கார்டு பில்களை செலுத்த முடியும்.
இன்னொரு சிறப்பான வழி, நீங்கள் ஆன்லைன் பேங்கிங்-ஐ பயன்படுத்தலாம். தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதன் மூலம் வரிசையில் காத்திருந்து பணத்தைச் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தே தக்க நேரத்திற்கு உங்களது கிரெடிட் கார்டு பில்களை செலுத்த முடியும்.
இதுபோன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றி சரியான நேரத்தில் உங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவதன் மூலம் தேவையற்ற கட்டணங்களைத் தவிர்த்து நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications