நடப்பு 2022 - 23ம் நிதியாண்டுக்கான முன் கூட்டியே செலுத்த வேண்டிய 4வது வரி தவணைக்கான கால அவகாசம் மார்ச் 15 அன்று முடிவடைகிறது.
ஒரு நிதியாண்டின் போது வணிகர்கள் 4 தவணைகளில் வருமான வரி செலுத்த வேண்டும். அப்படி இதில் ஏதேனும் ஒன்றை தவறவிடும்பட்சத்தில் 234பி மற்றும் 243சி பிரிவின் கீழ் அபராத தொகையினையும் செலுத்த வேண்டியிருக்கும்.
சமீபத்தில் வரி செலுத்துவோர் தங்களது கடைசி தவணை வரியினை முன் கூட்டியே செலுத்துபவர்கள் சரியான கால அவகாசத்திற்குள் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4 தவணைகள்
இது குறித்து சமீபத்தில் வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.
வரி செலுத்துவோர், பிரிவு 44AD அல்லது பிரிவு 44ADA இன் கீழ் அனுமான வரிவிதிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள், வருமானம் ஈட்டப்பட்ட அதே நிதியாண்டில் அட்வான்ஸ் டேக்ஸ் 4 தவணைகளில் செலுத்தப்படுகிறது. மொத்த வரியில் முதல் தவணையாக 15% ஜூன் 15-க்குள் செலுத்த வேண்டும். இதே இரண்டாவது தவணையாக 45% செப்டம்பருக்குள் செலுத்த வேண்டும்.
இதே டிசம்பர் 15-க்குள் ஜூன் மற்றும் செப்டம்பர் தவணைகளை உள்ளடக்கியதாகவும் வரி பொறுப்பு 75% ஆகவும் இருக்கும். இதே கடைசி தவணை என்பது மார்ச் 15-க்குள் கட்டியாக வேண்டும்.
அட்வான்ஸ் டேக்ஸ்
அட்வான்ஸ் டேக்ஸ் என்பது தங்களது சம்பளத்தினை தவிர வேறு வருமான ஆதாரங்களை கொண்ட தனி நபர்களால் செலுத்தப்படுகிறது. வாடகை, மூலதன ஆதாயங்கள், நிலையான வைப்பு தொகை, லாட்டரி வெற்றி போன்ற பலவற்றின் மூலம் கிடைக்கும் பல வருமானங்களும் இதில் அடங்கும். இப்படி 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலாக வருமானம் பெறுபவர்கள் இந்த அட்வான்ஸ் வரியினை செலுத்த வேண்டும்.
யாருக்கு விலக்கு?
இந்த அட்வான்ஸ் டேக்ஸில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல டிடிஎஸ்-கீழ் வரும் வரி செலுத்துவோரும் அட்வான்ஸ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
சரியாக முன் கூட்டி செலுத்தாவிடில்
ஒரு தனி நபர் இந்த அட்வான்ஸ் டேக்ஸினை சரியான நேரத்தில் செலுத்தாவிடில், அல்லது பகுதி தொகை இருப்பின் அவர்களுக்கு ஒரு காலாண்டுக்கு 3% வட்டி விதிக்கப்படலாம். இதே கடைசி காலாண்டில் 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கலாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications