கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக, வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு உதவும் விதமாக சிறப்பான வங்கி வைப்பு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தின.
தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ள நிலையில், வங்கிகள் அந்த சிறப்பு திட்டங்களை முடிவுக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தன.
முடிவுக்கு வருமா?
இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் கொரோனா காலத்தில் கூடுதல் வருமானத்தினை பெறவும், அதுவும் பாதுகாப்பான வருமானத்தினை பெறவும் வழிவகுத்தன. எனினும் தற்போது பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா இந்த திட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் எஃப்
ஆனால் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் எஃப் திட்டம் மார்ச் 31, 2022வுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்த திட்டத்தினை செப்டம்பர் 31, 2022 வரையில் நீட்டித்துள்ளது இவ்வங்கி.
இந்த திட்டத்தில் சாதாரண வைப்பு நிதி திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தினை காட்டிலும், சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களில் இன்னும் கூடுதலாக 0.25% வட்டி வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் சாதாரண பொதுமக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை விட, இந்த திட்டத்தில் 0.75% கூடுதலாக வட்டி வழங்கப்படுகின்றது.
பேங்க் ஆப் பரோடா ஸ்பெஷல் எஃப்டி திட்டம்
பேங்க் ஆப் பரோடாவில் வழங்கப்பட்டு வரும் ஸ்பெஷல் எஃப்டி திட்டத்தினை வழங்கி வருகின்றது. இது 60 வயதுக்கு மேற்பட்டோர்செய்யும் டெபாசிட் தொகையில் 1% கூடுதல் வருமானம் பெற வழிவகுத்தது. இது மூத்த குடிமக்களுக்கு 5 - 7 அண்டுகள் வரையில் 0.50% வரையில் கூடுதல் வருமானம் கிடைக்கவும் வழிவகுத்தது.
பேங்க் ஆப் பரோடா நீட்டிக்கவில்லை
ஹெச்.டிஎ.ஃப்.சி வங்கி அடுத்த ஆறு மாதங்கள் இந்த சிறப்பு திட்டத்தினை நீட்டித்திருந்தாலும், இதுவரையில் பேங்க் ஆப் பரோடா நீட்டிக்கவில்லை. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ கடந்த மாதமே இந்த வீகேர் திட்டத்தினை செப்டம்பர் 2022 வரையில் நீட்டித்தது நினைவுகூறத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications