ரிசர்வ் வங்கியானது பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பின் காரணமாக வங்கிகள் வட்டியினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
இதனால் கடன்களுக்கான விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனி மாத தவணைத் தொகையிலும் எதிரொலிக்கலாம் எனலாம்.
இன்று ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்திய நிலையில், பேங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
வட்டி அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா, ரெப்போ விகிதத்தின் அடிப்படையிலான வட்டி விகிதத்தினை (RBLR) அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது இன்று அமலுக்கு வந்துள்ளது. பேங்க் ஆப் இந்தியாவின் இந்த வட்டி அதிகரிப்பினால், வட்டி விகிதம் இன்று முதல் 9.10% ஆக அதிகரித்துள்ளது.
கடன் விகிதம்
பெஞ்ச் மார்க் கடன் விகிதங்கள் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) அல்லது ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) ஆக இருக்கலாம். இது ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பினை செய்யும்போதெல்லாம், கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம்.
ஆர்பிஐ-யின் முடிவென்ன?
கடன்களுக்கான வட்டி விகிதத்தினை ரிசர் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதிகரித்து வருகின்றது. இந்த முறை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக 5வது முறையாக ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
பேங்க் ஆப் இந்தியா MCLR
பேங்க் ஆப் இந்தியாவின் வட்டி விகிதம் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒவர் நைட் விகிதம் - 7.30%
1 மாத எம் சி எல் ஆர் விகிதம் - 7.65%
3 மாத எம் சி எல் ஆர் விகிதம் - 7.70%
6 மாத எம் சி எல் ஆர் விகிதம் - 7.90%
1 வருட எம் சி எல் ஆர் விகிதம் - 8.15%
3 வருட எம் சி எல் ஆர் விகிதம் - 8.35%
இன்றைய பங்கு விலை நிலவரம்?
என் எஸ் இ-யில் பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலையானது இன்று 2.82%ம் அதிகரித்து, 92.85% ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 95.20 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 90.55 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலையானது இன்று 2.88%ம் அதிகரித்து, 92.85% ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 95.15 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 90.50 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 95.15 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 40.40 ரூபாயாகும்.
இனி மற்ற வங்கிகளும் அதிகரிக்கலாம்?
பேங்க் ஆப் இந்தியா வங்கியினை தொடர்ந்து மற்ற வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு தவணை தொகையை அதிகரிக்க வழிவகுக்கலாம். இனி வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதன் காரணமாக உங்கள் மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம். இதனால் இனி நீங்கள் மாத மாதம் கூடுதல் தவணை தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications