நம்மில் பலர் அவசர தேவைக்காக நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கடன் வாங்குவதில் தவறு எதுவும் இல்லை என்று நினைப்போம். அந்த வகையில், ராகுல் என்பவர், தன்னுடைய அவசர தேவைக்காக தனது நண்பரிடம் ரூ.1.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இது ஒரு சாதாரண உதவியாகத் தோன்றினாலும், தற்போது அந்த செயலுக்கே அதே அளவு ரூபாயை அபராதமாக கட்ட வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
அபராதம் ஏன்..?: TaxBuddy என்ற வரி ஆலோசனை தளம் ராகுலின் சம்பவத்தை பகிர்ந்து, பொதுமக்களில் வருமானவரி சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றுள்ளது. ராகுலின் சம்பவம் தனிப்பட்டதாக மட்டும் இல்லாமல், இதேபோன்ற நிலைமையை பலர் இன்னும் அறியாமல் எதிர்கொள்கின்றனர்.

நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கிடையே கூட, பெரிய அளவில் ரொக்கமாக பணம் பரிமாற்றம் செய்தால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம் என TaxBuddy எச்சரித்துள்ளது. இது போல தவறான நம்பிக்கையால், சட்டத்தை மீறி பணத்தை பரிமாறுவது வருமானவரி நடவடிக்கைகள் மற்றும் அபராதங்களுக்கு வழிவகுக்கக்கூடும்.
இந்திய வருமானவரி சட்டத்தின் கீழ், ஒருவர் மற்றொருவரிடம் இருந்து ரூ.20,000-ஐ தாண்டி ரொக்கமாக கடன் வாங்குவது சட்டவிரோதமாகும். இதற்காக, அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படலாம். எனவே, பெரிய தொகையை பரிமாற்றம் செய்யும் போதெல்லாம் வங்கி மூலமாக அல்லது டிஜிட்டல் வழியில் செய்ய வேண்டும். ரொக்கமாக பரிமாற்றம் செய்தால், வருமானவரி துறை கண்காணிக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
ரொக்க பரிமாற்றங்களுக்கு அபராதம் ஏன்..?: இந்திய வருமானவரி சட்டம், பெரிய அளவிலான ரொக்க பரிமாற்றங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நீங்கள் கடன் வாங்குகிறீர்களா, கடன் திருப்பிச் செலுத்துகிறீர்களா, நன்கொடை அளிக்கிறீர்களா என்ற வித்தியாசமில்லை. ரூ.20,000-ஐ தாண்டும் ரொக்க பரிமாற்றம் சட்டவிரோதம் எனக் கருதப்படுகிறது.
ராகுல் தனது நண்பரிடம் இருந்து ரூ.1,20,000 ரொக்கமாக கடனாக பெற்றார். இதனால் அவர் வருமானவரி சட்டம் - பிரிவு 269SS ஐ மீறினார். "யாரிடமிருந்தும் ரூ.20,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை ரொக்கமாக கடனாக, டெபாசிட்டாக அல்லது முன்னுரிமை பணமாக ஏற்க முடியாது" என சட்டம் கூறுகிறது. வருமானவரி சட்டம் - பிரிவு 271DA-இன் படி, இந்த விதியை மீறினால், நீங்கள் ஏற்ற முழு தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படலாம். அதாவது, ராகுல் ரூ.1.2 லட்சம் வாங்கியதால், அதே அளவிலான அபராதம் விதிக்கப்படும்.
ரொக்க பரிமாற்றங்களில் வருமானவரி விதிகளை மீறுவது ராகுலின் சம்பவத்தில் மட்டும் இல்லை. பல்வேறு வழிகளில் தவறுகள் ஏற்பட்டு அபராதங்கள் விதிக்கப்படலாம். ஒரே நாளில், ஒரே நபரிடமிருந்து, அல்லது ஒரே பரிவர்த்தனைக்கு அல்லது நிகழ்வுக்காக ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாகப் பெறுவது சட்ட விரோதமாகும். நீங்கள் பெற்ற முழு தொகையை 100% அபராதமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
அதேபோல், நீங்கள் வியாபாரம் அல்லது தொழில் நடத்துகிறீர்களா? ஒரே நாளில், ஒரே நபருக்கு ரூ.10,000-ஐ தாண்டி ரொக்கமாக செலுத்தினால், அந்த தொகை வருமான கணக்கீட்டில் செலவாக ஏற்கப்படாது. இதனால் உங்கள் லாபம் அதிகமாக கணக்கிடப்படும். அதாவது, நீங்கள் அதிக வரி செலுத்த நேரிடும்.
அதேபோல், நீங்கள் ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் அல்லது கோவிலுக்கு நன்கொடை வழங்குகிறீர்கள் என்றால், அந்த நன்கொடைக்கு வருமானவரி விதி 80G அடிப்படையில் வரி விலக்கு கிடைக்கும். ஆனால், ரூ.2,000-ஐ தாண்டி ரொக்கமாக கொடுக்கப்படும் நன்கொடைக்கு, எந்த வரி விலக்கும் கிடைக்காது.
அதேபோல், நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு ப்ரீமியம் செலுத்தும் போது, Section 80D படி வரி நிவாரணம் கிடைக்கும். பணமாக பிரீமியம் செலுத்தினால், அந்த தொகைக்கு Section 80D-யின் கீழ் வரி விலக்கு கிடைக்காது. Preventive health check-up க்கு மட்டும், ரூ.5,000 வரை ரொக்கமாக செலுத்தலாம். அதற்கு வரி விலக்கு உண்டு.
வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் சொந்த பணத்தை எடுத்துக்கொள்வது சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், பெரிய அளவில் ரொக்கமாக பணத்தைத் திரும்ப எடுப்பதற்கும் வருமானவரி விதிகள் பிரத்தியேக கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஒருவரால் ஒரே ஆண்டில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 கோடியைத் தாண்டி ரொக்கமாக எடுக்கும்போது, வங்கி அல்லது நிலையான நிதி நிறுவனம் 2% TDS பிடித்தம் செய்யும். நீங்கள் ரூ.20 லட்சத்தை தாண்டி ரொக்கம் எடுத்தால் கூட, 5% TDS பிடித்தம் செய்யப்படும்.
ஏன் டிஜிட்டல் வழி நல்லது..?: வருமானவரி விதிகளை மீறாமல் பாதுகாப்பாக இருக்கலாம், பரிமாற்றங்கள் பதிவாக இருக்கும். அபராதங்கள், TDS, வரி நிவாரணம் இழப்பு போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம். உங்கள் நிதி செயல்பாடுகளில் நம்பகத்தன்மை மற்றும் பார்வைத்திறன் கிடைக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications