பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே அது சிக்கலானதாகத் தான் இருக்கும். இது மிக அச்சத்துக்குரியது என்ற சிந்தனைகள் தான், இன்று நம்மில்; பலருக்கு இருக்கும்.
இதனால் மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும் போது, கணிசமான அளவு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறைவாகவே இருக்கும்.
சற்று முன்பு தான் இது மக்களுக்கான பட்ஜெட், ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கும், புதிய தசாப்த்தத்தில் பொருளாதாரத்தின் அடிதளத்தை வலுப்படுத்தும் என்றும் பிரதமர் கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி சற்று ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது.
10% டிடிஎஸ்
இந்த நிலையில் மத்திய அரசு கடந்த சனிக்கிழமையன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2020ல் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பெறப்படும் வருமானம் 5,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், 10% வருமான வரி பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வருமான வரி திட்டத்தின் படி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் நிறுவன பங்குகள் போன்றவற்றில் இருந்து வரும் வருமானத்துக்கு விலக்கு கிடையாது. இதனால் இவ்வாறு பிடிக்கப்படும் வருமான வரியை மீண்டும் பெற முடியாது.
வருமானம் குறையும்
இந்த டிடிஎஸ் வரி திட்டத்தினை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதால் இனி இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும் வருமானம் குறைய வாய்ப்புள்ளது. ஆக இந்த திட்டத்தின் கீழ் 5000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் கட்டாயம் 10% வரி செலுத்த கட்டாயப்படுத்தபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அடி
இந்த வரி நடவடிக்கையானது டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூசன் வரி ஒழித்தலுக்கு பின்பு வருகிறது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் இந்த DDT உட்பட்டவையாக இருந்தன. அதே சமயம் அத்தகைய வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது மியூச்சுவல் பண்ட் முதலீடுகளிலும் டிடிஎஸ்ஸை பயன்படுத்தினால் இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அடியாகத் தான் இருக்கும்.
முதலீட்டாளர்கள் வருத்தம்
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு பொதுவான நிதி சார்ந்த குறிக்கோளைக் கொண்ட ஏராளமான முதலீட்டாளர்களின் சேமிப்பானது, நிதி மேலாளரால் பல்வேறு வகையான பிணையங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இவை நடுத்தர காலத்திலும், நீண்ட காலத்திலும் முதலீட்டின் மதிப்பை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டவையாகும். இத்திட்டங்கள், சீரான வருமானத்தை நாடுகின்ற அல்லது குறுகிய காலத்தில் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற விரும்புகின்ற முதலீட்டாளர்களுக்குப் பொருந்தாது. இந்த நிலையில் மத்திய அரசு இப்படி ஒரு வரி திட்டத்தினை கொண்டு வந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications