சென்னை: பணத்தை எப்படி திறம்பட நிர்வகிப்பது என்பது அனைவருக்குமே சவாலான விஷயம்தான். குறிப்பாக, வேலை, குடும்பம் என பல பொறுப்புகளைச் சமாளித்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது இன்னும் சவாலாக இருக்கும். எனவே உங்கள் சம்பாத்தியத்தை எப்படி சிறப்பாக நிர்வகிப்பது, எதிர்காலத்திற்கு சேமிப்பது என பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். இதற்கு உதவும் ஒரு எளிய முறைதான் இந்த 50:30:20 விதி. இந்த விதியைப் பயன்படுத்தி உங்கள் நிதியை எப்படி நிர்வகிப்பது என்பதைப் பார்ப்போம்.
50:30:20 விதி என்றால் என்ன?: இந்த விதி உங்கள் சம்பாத்தியத்தை 3 முக்கியப் பிரிவுகளாகப் பிரித்து பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இந்த விதியின் படி, உங்கள் சம்பளம் 50 சதவீதம், 30 சதவீதம், மற்றும் 20 சதவீதம் என 3 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

50 % தொகை: வாழ்க்கை நடத்துவதற்கு அவசியமான செலவுகளுக்காக இந்த 50% சம்பளத்தை ஒதுக்குங்கள். வாடகை, மளிகைச் சாமான்கள், போக்குவரத்து கட்டணங்கள், மருத்துவம் போன்ற அத்தியாவசிய செலவுகள் இதில் அடங்கும். இந்த விதியின் படி அதிக அளவிலான தொகை தினசரி தேவையை பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
30 % தொகை: உங்களுடைய விருப்பங்கள் மற்றும் ஓய்வு நேர செலவுகளுக்காக இந்த 30% சம்பளத்தை ஒதுக்குங்கள். ஷாப்பிங் செய்வது, வெளியே உணவு உண்பது, பொழுதுபோக்கு செலவுகள், பயணங்கள் போன்றவை இதில் அடங்கும்.
20 % தொகை: மீதமுள்ள 20 % சம்பளத்தை எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு பயன்படுத்துங்கள். ஓய்வுகால திட்டமிடல், அவசர நிதி தேவை, குழந்தைகளின் படிப்பு செலவுகள் போன்ற நீண்ட கால இலக்குகளுக்காக இதைப் பயன்படுத்தலாம்.
பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஏன் இந்த 50:30:20 விதி முக்கியம்?: உழைக்கும் பெண்கள் பொதுவாக பல பொறுப்புகளைச் சமாளிப்பதால், தங்களுடைய சம்பளத்தை எப்படி திறம்பட நிர்வகிப்பது என்பது குறித்த கவலை இருக்கலாம். இதுபோன்ற பெண்கள் 50:30:20 விதியைப் பயன்படுத்தி, எதிர்காலத்திற்கு சேமிக்கலாம். மேலும், இந்த விதி கட்டுப்பாடுடன் செலவு செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
50:30:20 விதியை எப்படி கடைப்பிடிப்பது?
பட்ஜெட்: இதற்கு உங்களுடைய மாத வருமானத்தைக் கணக்கிடுங்கள். சம்பளம், போனஸ், பிற வருமானம் என அனைத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டும். அதன் பிறகு, உங்கள் வரவு எவ்வளவு.. செலவு எவ்வளவு.. என்ற விபரங்களையும் தனித்தனியாகப் பிரித்து எழுதி வைக்க வேண்டும்.
செலவுகளைப் பட்டியலிடுங்கள்: அடுத்தபடியாக, உங்கள் மாதாந்திர செலவுகளைப் பட்டியலிடுங்கள். மாதம் மாதம் உங்கள் செலவினங்களில், ஏதேனும் தொகையை குறைக்க முடியுமா என்பதையும் பாருங்கள். இதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளை எளிதில் அடைய முடியும். உதாரணமாக, நீங்கள் வீடு வாங்க சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு உதவும் வகையில், உங்கள் செலவில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குங்கள். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா.. சிறிதாக நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு தொகையும், உங்களுக்கு பிற்காலத்தில் உதவிகரமானதாக இருக்கும்.
இது போன்ற விதியைப் பயன்படுத்துவதன் மூலம், மாதம் நீங்கள் கணிசமான வருமானத்தை சேமிப்பதற்காக ஒதுக்க முடியும். இது உங்கள் நிதி நலனைப் பாதுகாக்க உதவும்.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!



Click it and Unblock the Notifications