இந்தியாவில் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஒரு இலக்கை நோக்கி செல்லும் முதலீடு என்பதும், குழந்தைகளின் திருமணம், ஓய்வு பெறும் வயதில் ஒரு பெரிய தொகை, வெளிநாட்டு சுற்றுலா போன்றவையை இலக்காக வைத்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இலக்கே இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது என்பதும் சிறுவயதிலிருந்தே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வந்தால் நாம் ஓய்வு பெறும் நேரத்தில் மிகப்பெரிய தொகை நம் கையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்கு
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். குழந்தைகளின் திருமணம், குழந்தைகளின் வெளிநாட்டுப் படிப்பு, வெளிநாட்டு சுற்றுலா, வீடு வாங்க வேண்டும் அல்லது தொழில் தொடங்க வேண்டும் போன்ற பல இலக்குகளை நிர்ணயம் செய்து தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
இலக்கு இல்லாதவர்கள்
அந்த வகையில் எனக்கு எந்தவிதமான இலக்கும் இல்லை, சொந்த வீடு உள்ளது, ஓரளவுக்கு சேமிப்பும் உள்ளது, ஒவ்வொரு மாதமும் எனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து செலவுகளை செய்து வருகிறேன், எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தேவையா? என்றால் கண்டிப்பாக தேவைதான் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
எதிர்கால இலக்கு
இப்போதைக்கு உங்களுக்கு எந்தவிதமான இலக்கும் இல்லை என்றாலும் பின்னாளில் உங்களுக்கு திடீரென இலக்கு ஏற்படலாம். அப்போது இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உங்களுக்கு மிகச்சிறந்த பயனுடையதாக இருக்கும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டு வீரர்
ஒரு விளையாட்டு வீரர் தேசிய அல்லது சர்வதேச போட்டியில் தற்போது விளையாடவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பயிற்சி எடுத்து கொண்டே இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றால் அவர் தனது பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மட்டுமே முடியும். அது போல் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. தற்போதைக்கு எந்த விதமான இலக்கும் இல்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் இலக்கு திடீரென ஏற்பட்டால் அந்த இலக்கை அடைய வேண்டுமென்றால் நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சேமித்து வைத்த மியூச்சுவல் பண்ட் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிதி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சேமிப்பு
எனவே இலக்கு இருக்கின்றதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்கும் பழக்கத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications