நம் நாட்டில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்கின்றன. வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மற்றும் அசல் தொகை ஆகியவற்றை சுட்டிக்காட்டி நாம் வருமான வரி சலுகைகளை பெறலாம்.
ஆனால் இரண்டாம் முறை வீட்டுக் கடன் வாங்கினாலும் இதே சலுகைகளை பெற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்..

இந்திய வருமான வரி சட்டம் ஒரு நபருக்கு இரண்டு வீட்டுக் கடன்கள் வரை வரி சலுகைகளை வழங்குகிறது. உதாரணமாக ஒரு நபர் சென்னையில் ஒரு வீட்டுக் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கி அதில் வசித்து வருகிறார்.
அதற்காக கடனை திருப்பி செலுத்தி வரும் அவர், திருச்சியில் இரண்டாவதாக ஒரு வீட்டு கடன் வாங்கி பெற்றோருக்கு வீடு வாங்கி தந்துள்ளார். தற்போது அவர் இரண்டாவது வீட்டுக் கடனுக்கும் மாதாந்திர தவணை செலுத்தி வருகிறார். இவருக்கு முதல் வீட்டுக் கடனுக்கு கிடைத்த அனைத்து வரி சலுகைகளும், இரண்டாவது வீட்டுக்கும் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாவதாக அவர் கடன் பெற்று வாங்கிய வீட்டில் பெற்றோர் வசிக்கின்றனர். இதனை வருமான வரி நோக்கங்களுக்காக பயன்படுத்தும் போது சுயமாக ஆக்கிரமிக்கப்பட்ட வீடாகவே கருதிக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். நமது வருமான வரி சட்டம் ஒரு தனிநபர் அதிகபட்சம் இரண்டு வீடுகளை சுயமாக ஆக்கிரமிக்க அனுமதிக்கிறது.
இரண்டு வீட்டு கடன்களுக்காகவும் செலுத்தும் வட்டித்தொகையை வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 (பி) இன் கீழ் மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை குறிப்பிட்டு சலுகை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக முதல் வீட்டு கடனுக்கு செலுத்திய வட்டி 1.30 லட்சம் ரூபாய், இரண்டாவது வீட்டு கடனுக்கு செலுத்திய வட்டி 1.50 லட்சம் எனில் இதில் மொத்தமாக 2 லட்சம் வரை மட்டுமே வரி விலக்குக்கு கணக்கில் கொள்ளப்படும்.
அதே போல திருப்பி செலுத்தப்படும் அசல் தொகைக்கான சலுகையை பிரிவு 80 சி இன் கீழ் சுட்டிக்காட்டி வருமான வரி சலுகை பெற முடியும். அதாவது பிரிவு 80சி-இன் கீழ் மொத்தம் 1.50 லட்சம் வரை சலுகை கோர முடியும். எனவே மொத்தமாக இரண்டு கடன்களுக்கான அசல் தொகையையும் குறிப்பிட்டு 1.50 லட்சத்திற்குள் வரி விலக்கு பெறலாம்.
ஆனால் பழைய வரிவிதிப்பைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே இந்த சலுகைகளை கோர முடியும், புதிய வரிவிதிப்பின் கீழ் இந்த வரி சலுகை எதுவும் கிடைக்காது.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications