ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான இறுதி காலக்கெடு 2025 டிசம்பர் 31ஆம் தேதியாகும். இந்த முக்கியமான பணியை உரிய காலத்தில் முடிக்கத் தவறினால், பான் கார்டு செயலிழந்து போகும், பண பரிமாற்றம் மற்றும் வருமான வரி தொடர்பான பல்வேறு பணிகளை செய்ய முடியாமல் போகும் என வருமான வரித் துறை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

அபராதம்:
ஆதார்-பான் இணைக்க போதுமான அவகாசத்தை மத்திய நிதியமைச்சகம் கொடுத்திருந்த நிலையில், இதை இன்னும் செய்யாதவர்கள் இனி இணைக்கும் பட்சத்தில் வருமான வரி துறையின் ஈபைலிங் இணையதளத்தில் முதலில் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். இந்த தொகையை ஆன்லைனில் செலுத்திய பின்னரே இணைப்பு கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும்.
இருப்பினும், 2024 அக்டோபர் 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பான் கார்டு பெற்றவர்கள் ரூ.1,000 அபராதத்தில் இருந்து விலக்கு பெறுகிறார்கள். இவர்கள் 2025 டிசம்பர் 31 வரை ஆதாருடன் பான் கார்டை இலவசமாக இணைக்கலாம்.
ஆதார்-பான் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்:
2025 டிசம்பர் 31க்குள் இணைக்கத் தவறினால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். இதனால் வருமான வரித் தாக்கல், வங்கி மற்றும் டிமேட் கணக்குகள் திறப்பது, அதிக தொகைக்கு பொருட்களை வாங்குவது, வரி ரீபண்ட் பெறுவது போன்ற நிதிப் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.
செயலற்ற பான் அட்டை வைத்திருக்கும் நபர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் பெற முடியாது, ஒரு நாளுக்கு ரூ.50,000-க்குக் குறைவான வங்கி டெபாசிட்கள் மட்டுமே செய்ய முடியும், ரூ.10,000-க்கு அதிகமான வங்கி பரிவர்த்தனைகளை செய்ய தடை விதிக்கப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, அரசு மானியங்கள் பெறுவது, வங்கிக் கணக்குத் திறப்பது போன்ற அரசு சேவைகளும் கிடைக்காமல் போகும்.
பான்-ஆதார் இணைப்பு இல்லாதோர் புதிய பான் கார்டை பெறுவதிலும் சிக்கல் உள்ளது. பழைய அட்டை சேதமடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ இது மேலும் தீவிரமடையும். ஏனெனில், புதிய பான் விண்ணப்பத்திற்கு ஆதார் எண் கட்டாயம்.
பான்-ஆதார் இணைப்பை ஆன்லைனில் எளிதாக செய்வது எப்படி..?
முதலில், வருமான வரி துறையின் ஈபைலிங் இணையதளத்திற்கு (e-filing portal) சென்று சரியான பயனர் தகவல்களுடன் உள்நுழையவும். பதிவு செய்யாதவர்கள் புதிதாக பதிவு செய்துவிட்டு, உள்நுழைந்த பிறகு 'My Profile'-ல் உள்ள 'Personal Details' கீழ் இருக்கும் 'Link Aadhaar' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட்டு, 'e-pay tax மூலம் செலுத்த தொடரவும்' என்பதைத் தேர்ந்தெடுத்து முன்னோக்கிச் செல்லவும். அங்கு பொருத்தமான மதிப்பீட்டு ஆண்டு (assessment year) மற்றும் பணம் செலுத்தும் வகையாக 'Other Receipts' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் செலுத்த வேண்டிய தொகை தானாகவே நிரப்பப்பட்டிருக்கும்; 'continue' கிளிக் செய்யவும்.
இதை தொடர்ந்து ஒரு சலான் (challan) உருவாக்கப்படும். பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து, வங்கி இணையதளத்தில் பணத்தைச் செலுத்தவும்.
பணம் செலுத்திய பின் தானாக ஈபைலிங் இணையதளத்தில் பான்-ஆதார் இணைப்பை முடியும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications