இந்தியாவில் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற செயலிகளில் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் போனில் ஸ்விக்கி, சோமேட்டோ செயலிகள் இல்லாமலே இருக்காது என்ற நிலைமை தற்போது உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு ஆர்டர் செய்த உணவு உண்ணும் பழக்கம் என்பது மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
ஆன்லைன் செயலிகள் வாயிலாக உணவு ஆர்டர் செய்வது நமக்கு சவுகரியத்தை கொடுத்தாலும் நமக்கே தெரியாமல் நம்முடைய சேமிப்பையும் எதிர்கால செல்வத்தையும் இது எந்த அளவுக்கு கரைக்கிறது என்பது குறித்து பிரபல பட்டய கணக்காளரான நிதின் கவுசிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விரிவான பதிவை வெளியிட்டு இருக்கிறார் . அதில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தெரியாமலேயே ஒவ்வொரு மாதமும் உணவு டெலிவரி செயலிகள் வாயிலாக 35 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை சராசரியாக செலவிடுகிறார்கள் என கூறுகிறார் .

இதே பணத்தை நீங்கள் முதலீட்டை நோக்கி திருப்பி விட்டால் எதிர்காலத்தில் உங்கள் பெரிய அளவில் உங்களுக்கு செல்வம் சேரும் எனக் கூறியிருக்கிறார் .இந்தியாவில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு முதலீடு என்றால் அது இதுதான் என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு டெலிவரி செய்கிறார்கள் 35,000இல் இருந்து 40,000 ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். வாழ்க்கை ஹெக்டிக்காக இருப்பதாக நமக்கு நாமே கூறி கொண்டு உணவு ஆர்டர் செய்கிறோம் என தெரிவிக்கும் அவர், இந்த பணத்தை சேமித்தால் உங்களுக்கு எவ்வளவு பெரிய செல்வம் சேரும் தெரியுமா என குறிப்பிட்டு இருக்கிறார்.
நல்ல திறமை வாய்ந்த ஒரு சமையல் கலைஞரை வேலைக்கு நியமனம் செய்தால் மாதம் 5 முதல் 10 ரூபாய் வரை சம்பளம் கொடுத்தால் போதும், தரமான காய்கறிகள் மற்றும் பிற மளிகை பொருட்களை வாங்குவதற்கு 6 முதல் 12 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். அப்படி பார்க்கும்போது உங்களுக்கு உடனடியாக ஃபிரஸ்ஸாக சமைத்த உணவு கிடைக்கும், வீட்டில் தூய்மையான முறையில் சமையல் செய்திருப்பார்கள் , ஊட்டச்சத்தான உணவை உண்ண முடியும் .
இதற்கு நீங்கள் மாதத்திற்கு சராசரியாக 18 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்தால் போதும், ஆன்லைன் ஆர்டரை தவிர்த்து இதனை பின்பற்றினாலே மாதத்திற்கு உங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேமிக்க முடியும். இந்த 15 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு பெரிய அளவிலான செல்வம் கிடைக்கும் என கூறியிருக்கிறார். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யமுடியும் என்கிறார். இந்த ஒரு சின்ன ஹேக் மூலம் உங்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைக்கிறது ஆரோக்கியமான உடல் கிடைக்கிறது உங்களுடைய பர்சின் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications