சென்னை: நாம் அனைவருமே ஒரு குறிப்பிட்ட தொகையுடன் ஓய்வு பெற வேண்டும் என்பதற்காக சேமிப்புகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்கிறோம். ஆனால் இவ்வாறு நாம் ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்யும் போது பணவீக்கம் என்ற விஷயத்தை கவனிக்க தவறிவிடுகிறோம்.
உதாரணமாக நீங்கள் 5 கோடி ரூபாய் மொத்த தொகையுடன் ஓய்வு பெற வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால் 5 கோடி ரூபாயை கொண்டு இன்றைய தேதியில் ஒரு பொருளை வாங்குகிறீர்கள் எனில் அடுத்த 25 ஆண்டு ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு குறைந்து அந்த பொருளின் மதிப்பு அதிகரித்துவிடும். ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் பணத்தின் மதிப்பு குறைவதையே பணவீக்கம் என அழைக்கிறோம். இந்தியாவில் பணவீக்கம் சராசரியாக 6 சதவீதம் என சொல்லப்படுகிறது . அதாவது இந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருள் அடுத்த ஆண்டு 106 ரூபாய்க்கு விற்கப்படும்.

எனவே நீண்டகால நோக்கத்தில் முதலீடு செய்பவர்கள் பண வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்ய வேண்டும். தற்போது 5 கோடியின் மதிப்பு பணவீக்கம் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளில் எவ்வளவாக குறையும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்..
நமது ஓய்வு காலத்திற்கான சேமிப்பில் பணவீக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நபர் தன்னுடைய 25 வயதில் இருந்தே ஓய்வு காலத்திற்காக சேமிக்க தொடங்குகிறார். அவர் 50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என விரும்புகிறார் என்றால் அவருக்கு 5 கோடி ரூபாயை சேமிக்க 25 ஆண்டு காலங்கள் இருக்கிறது. இந்தியாவில் வருடத்திற்கு 6 சதவிகிதம் பணவீக்கம் இருக்கிறது என வைத்து கொள்வோம். தற்போது இருக்கும் 5 கோடி ரூபாய் என்பது 25 ஆண்டுகளுக்குப் பிறகு 1.17 கோடி ரூபாய் என குறைந்திருக்கும்.
அதே வேளையில் 25 வயதாகும் ஒரு நபர் 60 வயதில் 5 கோடி ரூபாய் உடன் ஓய்வு பெற விரும்பினால், அந்த தொகையை சேமிக்க அவருக்கு 35 ஆண்டுகள் இருக்கிறது. இந்தியாவில் வருடத்திற்கு 6 சதவிகிதம் பணவீக்கம் இருக்கிறது என வைத்து கொள்வோம். தற்போது இருக்கும் 5 கோடி ரூபாய் என்பது 35 ஆண்டுகளுக்குப் பிறகு 51.62 லட்சம் ரூபாய் என குறைந்திருக்கும்.
எனவே ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்பவர்கள் ஆண்டுக்கு 6 சதவிகிதத்திற்கும் மேல் லாபம் தரும் முதலீடுகளை தேர்வு செய்தால் அவர்களுக்கு பணவீக்கத்துக்கு நிகரான சேமிப்பை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். முதலீடு செய்பவர்கள் இணையதளங்களில் கிடைக்கும் பணவீக்க கால்குலேட்டர்களை பயன்படுத்தி தங்களின் முதலீடு 25 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு லாபம் தர வாய்ப்புள்ளது, அது பணவீக்கத்துக்கு நிகரான லாபம் தருகிறதா என ஆய்வு செய்து முடிவெடுப்பது சிறந்தது.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications