நம்மில் பலரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புகிறோம். அத்தகைய விருப்பங்களை தான் போஸ்ட் ஆபீஸ்கள் நமக்கு வழங்குகின்றன. வயதான காலத்தில் நிலையான வருமானம் பெறுவதற்காக தபால் அலுவலகங்களில் வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) முதலீடு செய்யலாம். இந்த அரசாங்கத் திட்டமானது..பிற சேமிப்புத் திட்டங்களை விடவும் அதிக வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் மாதம் 20,000 ரூபாய் வருமானம் பெறுவதற்கு எப்படி சேமிக்க வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்களில் அனைத்து வயதினருக்கும் ஏற்ப பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகிறது. அரசாங்கத் திட்டம் என்பதால் உங்கள் முதலீட்டுக்கு எந்தவித அபாயமும் இன்றி கணிசமான வருமானத்தை வழங்க உதவுகிறது. மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வருமானத்தை உறுதி செய்வதற்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தற்போது 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

குறைந்தபட்சம் முதலீடு: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் திறக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். SCSS திட்டத்தில் ஒரே ஒருமுறை மட்டும் தான் முதலீடு செய்ய முடியும். கூடுதல் டெபாசிட்களை செய்ய முடியாது. அதேபோல பல முறை டெபாசிட் செய்த பணத்தை திரும்ப பெறவும் முடியாது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி: SCSS திட்டத்திற்கு கணக்கு திறக்க தனிநபர்கள் 60 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். 55 முதல் 60 வயதுகுட்பட்ட விருப்ப ஓய்வு பெற்ற நபர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல 50 வயதுடைய விருப்ப ஓய்வு வாங்கிய நபர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் கீழ் கணக்கு தொடங்க முடியும். SCSS திட்டத்திற்கு தனிநபர் கணக்கையும் திறக்கலாம் அல்லது கூட்டுக் கணக்கையும் திறக்க முடியும்.
மாதம் ரூ.20,000 வருமானம் பெறுவது எப்படி?: இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம் என்று முன்பே பார்த்தோம். ஆனால் அதிகபட்ச முதலீடு ரூ.30 லட்சம் ஆகும். 1,000-த்தின் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் மொத்தமாக முதலீடு செய்யலாம். ஒரு வேளை ரூ.30 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 8.2 சதவீத வட்டி விகிதத்தில் மாதந்தோறும் 20,000 ரூபாய் வழங்கப்படும்.
இந்த வட்டியானது காலாண்டுக்கு ஒரு முறை அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் வழங்கப்படுகிறது. SCSS திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஒரு வேளை கணக்கு வைத்திருப்பவர் துரதிஷ்டவசமாக முன்கூட்டியே இறந்து விட்டால் கணக்கு மூடப்பட்டு அந்த தொகை அவர் நியமித்த நாமினிக்கு வழங்கப்படும்.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications