சென்னை: கோடைக் காலம் என்பதால் அனைவரும் குளுகுளுவென்று இருப்பதையே அதிகம் விரும்புகின்றனர். இதற்காக பலரும் தங்கள் வீட்டில் ஏர் கண்டிஷனர்களை வாங்கி மாட்டி இருப்பார்கள். சிலர் தங்கள் வீடுகளில் முன்னாடியே ஏசிகளை வைத்திருப்பார்கள். இது போன்ற வீடுகளில் கரண்ட் பில் செலவை மட்டும் கடந்த மாதத்திற்கு பார்த்தால்.. அப்பப்பா சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கும். இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அவற்றை செய்யாமல் இருக்கும்போது நீங்களும் உங்களுடைய கரண்ட் பில் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
உங்களின் ஏர் கண்டிஷனரின் மின்சாரச் செலவைக் குறைப்பதற்கான சில யுக்திகளைப் பார்ப்போம்:

ஏசியின் சரியான இன்ஸ்டலேஷன்: மின்சாரத்தை சேமிக்க உங்களுடைய ஏர்கண்டிஷனர்களை முறையாக பொருத்த வேண்டும். அதாவது உங்கள் சுவர்களில் அறையின் வளைவுகள் மற்றும் மூலைகளில் பொருத்துவது தவிர்க்கப்பட வேண்டும். சரியான இடத்திலும் உயரத்திலும் ஏசிகள் பொருத்தப்பட்டால் குறைந்த நேரத்தில் அறை முழுவதுமாக குளிர்ச்சி அடையும்.
புது மாடல் ஏசிகளைத் தேர்வு செய்யுங்கள்: பழைய மாடல்களை விட, புதிய செயல்திறன் கொண்ட மாடல்கள், மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. ஸ்டார் ரேட்டிங் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்கவும். அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடல்கள் குறைந்த அளவு மின்சாரத்தை உபயோகிக்கின்றன. நீங்கள் ஏசி வாங்கும்போது ஸ்டார் ரேட்டிங்-ஐ மதிப்பீடு செய்யவும்.
ஏர் கண்டிஷனர்களின் ஃபில்டர்களைப் பராமரிக்கவும்: உங்களிடம் உள்ள ஏசிகளின் ஃபில்டர்களை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து மாட்டுங்கள். சில நேரங்களில் ஃபில்டர்-இல் தூசிகள் சென்று அடைத்து விடும். இதனால் ஏசிகளின் குளிரூட்டும் செயல்திறன் குறையலாம். இது போன்ற நேரங்களில் உங்கள் ஏசி ஃபில்டர்களை தவறாமல் சுத்தம் செய்து சர்வீஸ் செய்வது நல்லது. பலரும் இந்த காரணத்தை கவனிக்காமல் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி நீண்ட நேரம் ஏசியை ஆன் செய்து வைத்திருக்கிறனர். இது போன்ற காரணங்களாலும், உங்களுக்கு மின்சாரம் அதிகரிக்கலாம்.
ஏர் கண்டிஷனர்களில் டைமர்களைப் பயன்படுத்தவும்: தூங்கும் நேரங்களில் ஏசிகளில் டைமர் அல்லது ஸ்லீப் மோடு பயன்படுத்தி இயக்கிக் கொள்ளலாம். இதனால் நீங்கள் நள்ளிரவில் எழுந்து உங்கள் ஏசியின் வெப்பநிலையை அட்ஜஸ்ட் செய்யும் தேவை குறைகிறது. அதோடு மட்டுமில்லாமல் உங்களுடைய மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
சீரான நிலையில் இயக்கவும்: ஏசியின் வெப்பநிலை அமைப்பை 24°C அல்லது 25°C வெப்பநிலையில் வைத்திருப்பது உங்கள் மின்சாரத்திற்கு மட்டுமல்ல, சுகாதாரத்துக்கும் நல்லது. அதிக குளிர்ச்சி சிலருக்கு சளி பிரச்சனையை ஏற்படுத்தும். உங்கள் உடல் நலனையும், நிதி நலனையும் கருத்தில் கொண்டு, இது போன்ற சீரான வெப்பநிலையை உபயோகிப்பது எல்லாவற்றுக்கும் சிறந்தது.
சரியாக உபயோகியுங்கள்: சிலர் ஏசிகளை ஆன் செய்துவிட்டு அப்படியே மறந்து விடுகின்றனர். இதனால் யாரும் இல்லாத நேரங்களிலும், சில வீடுகளில் ஏசி ஆன் செய்யப்பட்டு இருக்கிறது. இது உங்களை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். "மின்சார சிக்கனம் தேவை இக்கணம்" என்ற வாசகங்களை எல்லாம் அடிக்கடி நம் கண்ணில் படும்படி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவற்றைப் பார்த்தும் நாம் அதனை சரிவர செய்வதில்லை. இது ஏசிக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டில் இருக்கும் லைட், ஃபேன் என எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications