கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சா மாதம் ரூ. 1,000 கிடைக்குமா? செம திட்டம்.. சூப்பர் சான்ஸ்..!

சென்னை: பொதுவாக தமிழக பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவதை நம்மால் பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு என்றால் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தரும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த புதுமைப்பெண் திட்டம். இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெற முடியும் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் நினைவாக இந்த புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சா மாதம் ரூ. 1,000 கிடைக்குமா? செம திட்டம்.. சூப்பர் சான்ஸ்..!

புதுமைப்பெண் திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்?: இந்தத் திட்டத்திற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பில் சேரும் மாணவிகள் பயன்பெற முடியும். அதேபோல் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி உரிமை திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படித்து விட்டு, அதன் பிறகு 8ஆம் வகுப்பில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்துவிட்டு மேற்படிப்பில் சேரும் மாணவிகளும், இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். அனால், அவர்கள் தமிழ் வழி கல்வியில் படித்திருக்க வேண்டும்.

மேலும் அந்த மாணவிகள் வேறு ஏதேனும் அரசு தரும் உதவி தொகையைப் பெற்றுக் கொண்டிருந்தாலும், அவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் தகுதி பெறும் ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் ரூ. 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை பள்ளி கல்வியை முடித்த பிறகு காலேஜ் சேர்வதற்கோ அல்லது ஏதேனும் அவர்களுக்கு பிடித்த கோர்ஸ் சேர்வதற்கோ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கிட்டத்தட்ட அனைத்து படிப்புகளிலும் சேரும் தகுதி பெற்ற மாணவியருக்கு, இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது. உதாரணமாக, அவர்கள் நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் படிக்க விரும்பினால், அந்த நான்கு ஆண்டுகளிலும் அவர்களுக்கு மாத மாதம் ரூ. 1,000 ரூபாய் வழங்கப்படும். பள்ளிக்கல்வியை முடித்து எந்த பட்டயப் படிப்பை படித்தாலும் தகுதி பெறும் அனைத்து மாணவியருக்கும் இந்த உதவி தொகை கிடைக்கும்.

எவ்வளவு காலத்திற்கு உதவித்தொகை கிடைக்கும்?: நீங்கள் ஏதேனும் இளங்கலைப் பட்டம் படித்தால் மூன்று வருடங்களுக்கும், மேலும் ப்ரொபஷனல் கோர்ஸ் என்று சொல்லப்படுகிற மருத்துவப் படிப்பு அல்லது இன்ஜினியரிங் படிப்பு போன்றவற்றிற்கு நான்கு ஆண்டுகள் என நீங்கள் தேர்வு செய்த படிப்பை பொறுத்து அத்தனை ஆண்டுகளுக்கும் உங்களுக்கு மாத மாதம் உதவித்தொகை வழங்கப்படும்.

புதுமைப் பெண் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://www.pudhumaipenn.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். அந்த இணையதளத்தில் இன்ஸ்டிடியூஷன்/காலேஜ் என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.

அந்த விவரங்களை என்டர் செய்து, இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு, அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். நீங்கள் தகுதியுடைய நபர் எனில், உங்களுக்கான உதவித்தொகை மாதம் மாதம் உங்களுக்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, பான் கார்டு, பர்த் சர்டிபிகேட், 10ஆம் வகுப்பு மார்க் சீட், 12ஆம் வகுப்பு மார்க் சீட், வருமான வரி சான்றிதழ்.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தைக் காப்பதற்காக அரசு கொண்டுவந்துள்ள, இந்த புதுமைப் பெண் திட்டம் கண்டிப்பாக, அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+