ஓய்வூதிய காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் போதுமான அளவு தொகையை சேமித்து வைப்பது சவாலாகவே உள்ளது. இதற்கு மத்தியில் நமக்கு உதவி செய்யும் திட்டங்களில் ஒன்றுதான் "EPF" திட்டம். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வு கால வாழ்க்கையைப் பாதுகாக்க EPFO அமைப்பு ஓய்வூதியத் திட்டத்தை வழங்குகிறது. ஆனால், பல விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையில், பலருக்கும் தெரியப்படாத ஒன்று உள்ளது. அதுதான் ஊழியர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கும் EPFO லாயல்டி திட்டம். இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
EPFO அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ். இதன் கீழ் எந்த ஒரு சந்தா தொகையோ அல்லது வேறு ஏதேனும் தொகையோ டெபாசிட் செய்யாமலேயே, குறிப்பிட்ட சில விதிமுறைகளைப் பின்பற்றி உங்களால் 50,000 ரூபாய் வரை பெற முடியும்.

லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ் (loyalty-cum-life benefits) என்றால் என்ன?: நீண்ட காலம் பங்களிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் EPFO அமைப்பு செய்த சிறப்பு ஏற்பாடுதான் லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ். இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை பெறலாம். ஆனால், இந்தப் பணத்தைப் பெற ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்.
லாயல்டி-கம்-லைஃப் பெனிபிட்ஸ் பலனைப் பெறுவது எப்படி?: இந்த கூடுதல் பலனைப் பெற விரும்பும் EPFO உறுப்பினர்கள் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் அதே EPF கணக்கில் பங்களிப்பு செய்ய வேண்டும். இந்தத் தொகையை ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது அவர்களுடைய பங்களிப்பு மற்றும் அதற்கான வட்டியுடன் சேர்த்து 50,000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம்.
யாருக்கு எவ்வளவு லாயல்டி பெனிபிட் கிடைக்கும்?: உங்களுடைய அடிப்படைச் சம்பளம் 5000 ரூபாய்க்கும் கீழிருந்து தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒரே EPF கணக்கில் பங்களிப்பு செய்து வந்தால் 30,000 ரூபாய் வரை கணக்கை முடிக்கும் போது பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல உங்களுடைய அடிப்படை சம்பளம் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 ரூபாயாக இருந்தால், நீங்களும் ஒரே EPF கணக்கில் பங்களிப்பு செய்து வந்தால் ரூ. 40,000 வரையில் முதிர்வு காலத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல உங்களுடைய அடிப்படைச் சம்பளம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்து நீங்கள் EPF கணக்கில் பங்களிப்பு செய்தால் 50,000 ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் 2024 நிலவரப்படி, இந்தியாவில் அடிப்படை ஊதியம் மற்றும் ரூ. 15,000 வரை அகவிலைப்படியுடன் சம்பளம் பெறும் ஊழியர்கள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். ஆனால் 15,000-க்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், தங்கள் நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால் அல்லது PF கமிஷனரிடம் ஒப்புதல் பெற்றால் EPF கணக்கைத் தொடங்கலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications